Header Ads



பாராளுமன்றத்தின் உணவு மற்றும் குடிபானங்களை முழுமையாக கண்காணிக்க உத்தரவு

நாடாளுமன்றத்துக்குள் விநியோகிக்கப்படும் உணவு மற்றும் குடிபானங்கள் தொடர்பில், முழுமையாக கண்காணிக்குமாறு சபாநாயகர் கருஜயசூரிய சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக, சபாநாயகரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இலங்கையிலேயே அதிகமாக உணவுகள் விரயமாக்கப்படுவது நாடாளுமன்றத்தில் தான் என கடந்த வாரம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்ட கருத்தையடுத்தே சபாநாயகர் கருஜயசூரிய இந்த அறிவிப்பை விடுத்துள்ளதாக ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.