Header Ads



வெள்ளத்தில் மூழ்கியது கஹட்டோவிட்ட


அடை மழை காரணமாக இன்றைய தினம் (07) அத்தனகல்ல ஓயா பெருக்கெடுத்ததால் கஹட்டோவிட்ட கிராமத்தின் சந்தியை அண்டிய பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதனால் பல குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. 

இருந்தாலும் நேரம் செல்லச் செல்ல வெள்ள நீர் வடிந்து சென்று கொண்டிருக்கும் நிலை காணப்படுகின்றது. மீண்டும் அடை மழை பொழியும் சந்தர்ப்பத்தில் நிலைமை மோசமடையும் என்று பிரதேசவாசிகள் அச்சம் தெரிவிக்கின்றனர்.


No comments

Powered by Blogger.