Header Ads



சாய்ந்தமருது றியாளுல் ஜன்னா வித்தியாலயம், புலமை பரிசில் பரீட்சையில் சாதனை

இன்று வெளியான புலமை பரிசில் பரீட்சையில் கல்முனை கல்வி வலயத்தின் கீழ் உள்ள சாய்ந்தமருது றியாளுல் ஜன்னா வித்தியாலயம் வரலாற்று சாதனை பெற்றுள்ளதாக அதிபர் எம்.ஐ. சம்சுதீன் தெரிவித்தார். 

மிகவும் நலிவடைந்த நிலையில் இருந்த குறித்த பாடசாலை அதிபர் எம்.ஐ. சம்சுதீன் அவர்களது வருகையைத் தொடர்ந்து பல்வேறு செயற்பாடுகளிலும் முன்னிலை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

இம்முறைய புலமைப் பரிசில் பரீட்சையில்  வரலாற்றில் முதன்முதலாக 2 மாணவர்கள் சித்தி பெற்றுள்ளதோடு  தோற்றிய 23 மாணவர்களில் 95.65வீதமானோர் 70 புள்ளிகளுக்கு மேல் பெற்று சித்தியடைந்து பாடசாலைக்கு நற்பெயரை பெற்றுக்கொடுத்துள்ளது  குறிப்பிடத்தக்கது.

 எம்.வை.அமீர்-

No comments

Powered by Blogger.