Header Ads



ஞானசாரரை மன்னிக்கும்படி ஜனாதிபதியிடம் கடிதம், கையளித்த பொதுபல சேனா

சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள பொதுபல சேனாவின் பொதுசெயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் என்று கோரி, ஜனாதிபதியிடம் அந்த அமைப்பு கடிதம் ஒன்றை கையளித்துள்ளது.

ஞானசார தேரர் நீதிமன்றில் கருத்தை வெளியிட்டாரே தவிர, அவர் நீதிமன்றில் அவமதிக்கும் வகையில் செயற்படவில்லை என்று அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பாதுகாப்பு தரப்பினை அநாவசியமாக சிறையில் அடைக்க கூடாது என்ற அடிப்படையிலேயே அவர் கருத்தை தெரிவித்தார்.

அவ்வாறு கருத்து வெளியிட்டமை தவறாக இருந்தால், மன்னிக்கும்படி அந்த சந்தர்ப்பத்தில் அவர் கோரியதாக குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.