Header Ads



உயர் கல்விக்காக, துருக்கி பயணம்

பேருவளை ஜாமியா நளீமிய்யா கலாபீட பட்டதாரியான, அஷ்ஷெய்க் அப்ழல் அஹ்மத் (நளீமி) புலமைப்பரிசில் பெற்று துருக்கியிலுள்ள முன்னணி பல்கலைக்கழகமான அன்காரா பல்கலைக்கழகத்தில் தனது முதுமாணி (எம்.) பட்டப்படிப்பை மேற்கொள்ள அண்மையில் துருக்கி நாட்டுக்கு பயணமானார்.அங்கு இவர் 'சர்வதேச உறவுகள் தொடர்பான ஆய்வுகளை ' தனது முதுமாணி பட்டப்படிப்பிற்காக மேற்கொள்ளவுள்ளார்

சில காலம் இலங்கை சூரா சபையின் நிர்வாக உத்தியோகத்தராக பணியாற்றிய இவர், சமூக சேவையில் மிகவும் ஆர்வமும் அக்கரையும் கொண்டு செயற்பட்டு வந்தார்

குறிப்பாக சமாதான சகவாழ்வுக்காக உழைக்கும் பிற சமூக சகோதரர்களுடன் பல்வேறுபட்ட வேலைத்திட்டங்களை இவர் முன்னெடுத்து வந்தமையும் குறிப்பிடத்தக்கது

இவர் ஜாமிய்யா நளீமிய்யா கலாபீட சிரேஷ்ட விரிவுரையாளரும், சூரா சபையின் உப தலைவருமான அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம். பளீல் (நளீமி)யின் சிரேஷ்ட புதல்வராவார்.

No comments

Powered by Blogger.