Header Ads



முஸ்லிம் சமூகம், தூங்குவது ஏன்...? கவலைப்படுகிறார் கலா­நிதி நௌபல்

மாகா­ண­சபைத் தேர்தல் தொகுதி எல்லை நிர்­ணய அறிக்கை மூலம் தமது சமூ­கத்­துக்கு அநீதி இழைக்­கப்­பட்­டுள்­ள­தாக ஏனைய சமூ­கங்­களின் மதத் தலை­வர்கள் முறைப்­பா­டு­களை சமர்ப்­பித்­துள்ள நிலையில் எல்லை நிர்­ண­யங்­க­ளினால் பெரிதும் பாதிக்­கப்­பட்­டுள்ள முஸ்லிம் சமூ­கத்தின் மதத் தலை­வர்­களோ மத அமைப்­பு­களோ அர­சியல் தலை­மை­களோ இது­வரை எவ்­வித முறைப்­பா­டு­க­ளையும் சமர்ப்­பிக்­காமை கவ­லைக்­கு­ரி­யது என எல்லை நிர்­ணய மீளாய்வுக் குழுவின் உறுப்­பினர் கலா­நிதி ஏ.எஸ்.எம். நௌபல் தெரி­வித்தார்.

எல்லை நிர்­ணய மீளாய்வுக் குழுவின் செயற்­பாட்டு தொடர்பில் கருத்து தெரி­விக்­கை­யி­லேயே அவர் இவ்­வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கையில்;

‘எல்லை நிர்­ண­யத்தில் தமது சமூ­கத்­துக்கு அநீதி இழைக்­கப்­பட்­டுள்­ள­தாக பௌத்த பிக்­குகள் அமைப்பு மாகாண சபைகள் மற்றும் உள்­ளூ­ராட்சி அமைச்­ச­ருக்கு முறைப்­பா­டு­களைச் சமர்ப்­பித்­துள்­ளன. ஏனைய மதத் தலை­வர்­களும் இவ்­வாறு முறைப்­பா­டு­களைச் செய்­தி­ருந்­தாலும் முஸ்லிம் சமூ­கத்தைப் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் உலமா சபையோ ஏனைய சிவில் சமூக அமைப்­பு­களோ அர­சியல் தலை­வர்­களோ இது­வரை எவ்­வித முறைப்­பா­டு­க­ளையும் சமர்ப்­பிக்­க­வில்லை.

மாகாண சபை தேர்தல் தொகுதி எல்லை நிர்­ண­யத்தில் முஸ்­லிம்­க­ளுக்கு ஏற்­பட்­டுள்ள பாதிப்­பு­களை சம்­பந்­தப்­பட்ட அமைச்­ச­ரான பைசர் முஸ்­த­பா­வுக்கு அனுப்பி வைக்க முடியும். அவ்­வா­றான முறைப்­பா­டுகள் எல்லை நிர்­ணய மீளாய்வு குழுவின் கவ­னத்­திற்­கொள்­ளப்­படும்.

எல்லை நிர்­ணய மீளாய்வு குழு­விற்கு தனது அறிக்­கையை தயா­ரிப்­ப­தற்கு இரண்டு மாத கால அவ­கா­சமே வழங்­கப்­பட்­டது. அந்தக் கால எல்லை தற்­போது பூர்த்­தி­யா­கி­யுள்­ளது. இது­வரை பத­விக்­கால நீடிப்பு வழங்­கப்­ப­ட­வில்லை. இது தொடர்பில் சபா­நா­ய­கரை தெளி­வு­ப­டுத்­தியும் கால எல்லை நீடிக்­கப்­ப­ட­வில்லை என்­றாலும் மீளாய்­வுக்­குழு தனது கட­மை­களைத் தொடர்ந்தும் முன்­னெ­டுத்து வரு­கி­றது.

எமது சமூக அமைப்­பு­களும் சமூகத் தலை­வர்­களும் சமூ­கம்சார் விட­யங்­களில் தொடர்ந்தும் அக்­க­றை­யின்றியே இருக்­கின்­றனர். தற்போது நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மையற்ற நிலைமை நிலவுவதால் அரசியல் தலைவர்களும் சமூகம்சார் விடயங்களில் அக்கறையின்றி இருக்கின்றார்கள். இது சமூகத்துக்கு பாதிப்பாக அமையலாம் என்றார்.

-Vidivelli

1 comment:

  1. If they feel that there will be monetary benefits our political traders (leaders) will shout. This is the fate of Srilankan Muslims.

    ReplyDelete

Powered by Blogger.