Header Ads



மஹிந்த - மைத்திரி இணைவார்களா...? ஐ.தே.க கடும் எச்சரிக்கை

மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து சுதந்திர கட்சி மாற்று அரசாங்கத்துக்கான முடிவை எடுக்கும் தருணத்தில் , தனித்து ஆட்சி அமைப்போம. இதன்போது எவ்விதமான விட்டுக்கொடுப்புகளுக்கும் இடமில்லை என  ஐக்கிய தேசிய கட்சி எச்சரித்துள்ளது.

வீண் பேச்சுக்களை தவிர்த்து முடிந்தால் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவு திட்டத்தை தோல்வியுற செய்து மாற்று அரசாங்கத்தை உருவாக்கிக் கொள்ளுமாறு சவால் விடுத்துள்ளது. 

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமாக சிறிகொத்தாவில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு  விளக்கமளிக்கும் போதே பாராளுமன்ற உறுப்பினர் துசார இந்தனில்  இதனை தெரிவித்தார். 

No comments

Powered by Blogger.