Header Ads



மாணவனை சரமாரியாக கத்தியால், குத்திய மாணவன்

இரத்தினபுரி – ரக்வாணை – ரம்புக பிரதேசத்தில் பாடாலை மாணவரை கூரிய ஆயுதத்தால் தாக்கிய மேலும் ஒரு பாடசாலை மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று பிற்பகல் மேலதி வகுப்பில் கலந்து கொண்ட பின்னர் மீண்டும் வீடு திரும்பிய போது இந்த முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.

குறித்த மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட வாய்த்தகராறு அதிகரித்து இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தாக்குதலில் காயமடைந்த மாணவர் தற்போது இரத்தினபுரி மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வருகின்ற நிலையில், தாக்குதலை மேற்கொண்ட மாணவர் கைது செய்யப்பட்டு பெல்மடுல்லை நீதவான் முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட்ட பின்னர் ஒரு லட்சம் ரூபாய் சரீர பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.