Header Ads



மிரட்டுகிறது காலநிலை 6 பேர் பலி 17372 பேர் பாதிப்பு

நாட்டின் பல பாகங்களிலும் பெய்து வரும் அடை மழை, காற்று என்பவற்றால் ஏற்பட்டுள்ள வெள்ளத்தினால் கடந்த மூன்று தினங்களில் 6 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ஒருவர் காணாமல் போயுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

நாட்டின் பல பிரதேசங்களிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதாகவும், இதில் அதிகம் பாதிக்கப்பட்ட பிரதேசங்களாக களுத்தறை, காலி மற்றும் கொழும்பு ஆகிய மாவட்டங்கள் காணப்படுவதாகவும் நிலையம் தெரிவித்துள்ளது.

இந்த மூன்று மாவட்டங்களில் 4603 குடும்பங்களைச் சேர்ந்த 17372 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் நிலையம் மேலும் கூறியுள்ளது

No comments

Powered by Blogger.