Header Ads



500 இலட்சம் இழப்பீடு, கோருகிறார் முஜிபுர் ரஹ்மான்

கூட்டு எதிர்க்கட்சி கொழும்பில் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது விஷம் கலந்த பால் வழங்கியதாக தனக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு சம்பந்தமாக சட்ட நடவடிக்கை எடுக்க போவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

இந்த சம்பவத்தை அடிப்படையாக கொண்டு சிலர் சிங்கள - முஸ்லிம் மோதலை உருவாக்க முயற்சித்து வருகின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனால், இந்த குற்றச்சாட்டுக்கு எதிராக குற்றம் சுமத்தியவர்களிடம் 500 இலட்சம் ரூபாய் இழப்பீடு கோரி, சட்டத்தரணி ஊடாக கடிதம் அனுப்பவுள்ளேன் என்றும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தமை தொடர்பில் கருத்து வெளியிட்ட முஜிபுர் ரஹ்மான், உதய கம்மன்பில எடை குறைந்த மூளையே தலையில் இருப்பதாக கூறியுள்ளார்.

1 comment:

  1. எல்லாருக்கும் 500 லட்சம்தான் தேவைப்படுது ஒருவேளை வாங்கி பழகின அமௌண்டா இருக்குமோ?

    ReplyDelete

Powered by Blogger.