Header Ads



4 அமைச்சர்களில், 2 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்

இந்தியாவின் உளவுத் துறையான “ரோ” அமைப்புடன் தொடர்புடைய இரு அமைச்சர்களே ஜனாதிபதி தொடர்பான பொய்யான தகவல்களை அமைச்சரவையிலிருந்து வழங்கியுள்ளதாகவும், அவர்கள் தொடர்பான பெயர்களை மிக விரைவில் வெளிப்படுத்தவுள்ளதாகவும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

இன்று (20) நடைபெற்ற பொதுக் கூட்டமொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.

அமைச்சரவையில் பேசியதாக பொய்யான தகவல் வழங்கிய அமைச்சர்கள் நான்கு பேரில் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர்களின் பெயர்களை விரைவில் வெளியிடவுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

இந்த இருவர் தொடர்பிலும் ஜனாதிபதியும், பிரதமரும் தீர்க்கமான முடிவொன்றை எடுக்க வேண்டும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார். 

No comments

Powered by Blogger.