Header Ads



முஸ்லிம் தனியார் தொடர்பில், நவம்பர் 30 இற்குள் இறுதி தீர்மானம் - தலதா அதிரடி

முஸ்லிம் விவாக, விவா­க­ரத்­துச்­சட்­டத்தில் திருத்­தங்கள் முஸ்லிம் சமூ­கத்தின் சிவில் அமைப்­புக்கள், புத்தி ஜீவிகள் மற்றும் சமூக ஆர்­வ­லர்­களின் ஆலோ­ச­னை­களைப் பெற்­றுக்­கொண்­டதன் பின்பே மேற்­கொள்­ளப்­படும். திருத்­தங்கள் தொடர்­பான இறு­தித்­தீர்­மானம் எதிர்­வரும் நவம்பர் மாதம் 30 ஆம் திக­திக்குள் மேற்­கொள்­ளப்­படும் என நீதி மற்றும் சிறைச்­சா­லைகள் மறு­சீ­ர­மைப்பு அமைச்சர் தலதா அத்­து­கோ­ரள தன்னைச் சந்­தித்த பள்­ளி­வா­சல்­களின் பிர­தி­நி­தி­க­ளி­டமும், முஸ்லிம் பெண்கள் அமைப்­பு­களின் பிர­தி­நி­தி­க­ளி­டமும் தெரி­வித்­துள்ளார். 

 பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எஸ்.எம். மரிக்­காரின் ஏற்­பாட்டின் கீழ் கொழும்பு மாவட்ட பள்­ளி­வா­சல்கள் சம்­மே­ள­னத்தின் பிர­தி­நி­தி­களும் மற்றும் முஸ்லிம் பெண்கள் அமைப்­பு­களின் பிர­தி­நி­திகள், ஆலோ­சனை மற்றும் நல்­லி­ணக்க பேர­வையின் பிர­தி­நி­திகள் கடந்த வெள்­ளிக்­கி­ழமை நீதி மற்றும் சிறைச்­சா­லைகள் மறு­சீ­ர­மைப்பு அமைச்சர் தலதா அத்­து­கோ­ர­ளவை பாரா­ளு­மன்ற கட்­டடத் தொகு­தியில் சந்­தித்து முஸ்லிம் விவாக விவா­க­ரத்துச் சட்­டத்தில் திருத்­தங்கள் தொடர்பில் கலந்­து­ரை­யா­டி­னார்கள். இச்­சந்­திப்பில் சிறுவர் பாது­காப்பு மற்றும் மகளிர் விவ­கார அமைச்சர் சந்­தி­ராணி பண்­டார, பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எஸ்.எம்.மரிக்கார் ஆகி­யோரும் கலந்து கொண்­டி-­ருந்­தனர்.

தாருல்­ஹுதா, அல்­முஸ்­லிமாத், கெயார் லைன் (Care Line) ஆகிய பெண்கள் அமைப்­புகள் ஆலோ­சனை மற்றும் நல்­லி­ணக்கப் பேரவை மற்றும் கொழும்பு மாவட்ட பள்­ளி­வா­சல்கள் சம்­மே­ள­னத்தின் பிர­தி­நி­திகள் என 20 பேர் இச்­சந்­திப்பில் பங்கு கொண்­டி­ருந்­தனர்.

இக்­கு­ழு­வினர் முஸ்லிம் விவாக விவா­க­ரத்துச் சட்­டத்தில் திருத்­தங்­களைச் செய்­வ­தற்­காக சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்ள அறிக்­கையில் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி பாயிஸ் முஸ்­த­பாவின் சிபா­ரி­சு­க­ளையே அனு­ம­திப்­ப­தா­கவும் ஷரீ­ஆ­வுக்கு முர­ணான எந்தச் சிபா­ரி­சு­க­ளையும் அனு­ம­திக்கக் கூடாது எனவும் நீதி அமைச்­சரை வேண்டிக் கொண்­டனர்.

முஸ்லிம் பெண்­களின் திரு­மண வயது 16 ஆக அமைய வேண்டும் எனவும் 16 வய­துக்கு குறை­வான முஸ்லிம் பெண்­களின் திரு­ம­ணத்­துக்கு காதி நீதி­ப­தி­களின் அனு­மதி பெற்­றுக்­கொள்­ளப்­பட வேண்டும் எனவும் காதி­நீ­திவான் அனு­மதி வழங்­கு­வ­தற்­கான வழி­முறை (Guide Lines) ஒன்று தயா­ரிக்­கப்­பட வேண்டும் எனவும் வேண்டிக் கொண்­டனர்.

காதி­நீ­தி­மன்­றங்­களின் தரத்­தினை உயர்த்­து­வதன் மூலமும் கட்­ட­மைப்­பினை மாற்­றி­ய­மைப்­பதன் மூலமும் தற்­போது நிலவும் பிரச்­சி­னை­களில் 50 வீத­மா­ன­வற்றைத் தீர்க்­கலாம் எனவும் வலி­யு­றுத்­தினர். காதி­நீ­தி­ப­தி­க­ளுக்கு 60 ஆயிரம் ரூபா சம்­ப­ள­மாக வழங்­கப்­ப­டு­வ­துடன் அவர்­க­ளுக்கு நீதி­மன்ற கட்­டட வச­திகள், காரி­யா­லய வச­திகள், போக்­கு­வ­ரத்து வச­திகள் என்­பன வழங்­கப்­பட வேண்டும்.

காதி­நீ­தி­ப­தி­க­ளுக்கு பயிற்­சிகள் வழங்­கப்­ப­டாமை பாரிய குறை­பா­டாக இருக்­கின்­றது. இதனை நீதி­ய­மைச்சு ஏற்­பாடு செய்ய வேண்­டு­மெ­னவும் அமைச்­ச­ரிடம் வேண்­டுகோள் விடுக்­கப்­பட்­டது.

இந்தச் சந்­திப்பு தொடர்பில் கொழும்பு மாவட்ட பள்­ளி­வா­சல்கள் சம்­மே­ள­னத்தின் தலைவர் அஸ்லம் ஒத்மான் கருத்து தெரி­விக்­கையில், நீதி­ய­மைச்­ச­ரிடம் சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்ள அறிக்­கையில் சில விட­யங்­களில் மாத்­தி­ரமே முரண்­பா­டுகள் காணப்­ப­டு­கின்­றன. இரு­த­ரப்பும் கலந்­து­ரை­யா­டல்­களை மேற்­கொள்­வதன் மூலம் இணக்­கப்­பாட்­டினை எட்­ட­மு­டியும் எமக்குள் நாம் பிரச்­சி­னை­களை வளர்த்துக் கொண்­டி­ருப்­பதில் எவ்­வித பயனும் ஏற்­படப் போவ­தில்லை என்றார்.

முஸ்லிம் பிர­தி­நி­தி­களின் கருத்­து­களை உள்­வாங்­கிக்­கொண்ட நீதியமைச்சர் தலதா அத்துக்கோரள முஸ்லிம் சமூகத்தின் கருத்துகளை தொடர்ந்தும் எதிர்பார்ப்பதாகவும் தாமதியாமல் ஆலோசனைகளைச் சமர்ப்பிக்கும் படியும் வேண்டிக்கொண்டார். முஸ்லிம் சமூகத்தின் நிலைப்பாட்டினை அறிந்து கொண்டதன் பின்பு மீண்டும் முன்னாள் நீதியரசர் சலீம் மர்சூப், ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா ஆகியோருடன் கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவித்தார்.
-Vidivelli

1 comment:

  1. The MMDA should be amended or totally replaced. It's not divine.

    ReplyDelete

Powered by Blogger.