Header Ads



சர்வதேச மொழிபெயர்ப்புதின விழாவில், இலங்கையின் 2 முஸ்லிகளுக்கு கௌரவம்

ஐ.நா.சபையின் ஏற்பாட்டில் 1953ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட 'சர்வதேச மொழிபெயர்ப்பாளர்களின் கூட்டமைப்பினால்' ( International Federation of Translators (FIT) ) 'சர்வதேச மொழிபெயர்ப்பு தினம்' ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த வருடத்துக்கான விழா நிகழ்வு செப்டம்பர் மாதம் 30 ஆம் திகதி தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும் அரசகரும மொழிகள் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் வெகுவிமரிசையாக நடைபெற்றது.

   இவ் விழா நிகழ்வில் சர்வதேச சிறுகதைப் போட்டிகளில் வெற்றி பெற்ற மொழிபெயர்ப்பாளர்கள் மூதூரைச் சேர்ந்த நிஸார் எம்.ஷியாம் மற்றும் மாவனல்லையைச் சேர்ந்த எம்.ரிஷான் ஷெரீப் ஆகியோர்  தமது மொழிபெயர்ப்பு பணிகளுக்காக பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 




No comments

Powered by Blogger.