Header Ads



ஹிருணிகாவின் கடவுச்சீட்டுக்கு, விடுதலை கிடைத்தது

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவின் கடவுச்சீட்டை கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று விடுவித்துள்ளது.

தெமட்டகொடையில் ஒருவரை கடத்தி சென்ற சம்பவம் தொடர்பாக ஹிருணிகாவுக்கு எதிரான வழக்கில், நீதிமன்றம் அவரது கடவுச்சீட்டை முடக்கியது.

இந்த நிலையில், ஜனநாயகத்திற்கான வெஸ்மினிஸ்டர் நிதியம் ஏற்பாடு செய்துள்ள பயிற்சி பாசறையில் கலந்து கொள்வதற்கான ஆவணங்களை தயார்படுத்த தனது கடவுச்சீட்டை விடுவிக்குமாறு ஹிருணிகா, நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தார்.

கோரிக்கையை ஏற்றுக்கொண்ட மேல் நீதிமன்ற நீதிபதி சாய் மகேந்திரன் எதிர்வரும் ஒக்டோபர் 8ஆம் திகதி வரை கடவுச்சீட்டை விடுவித்து உத்தரவிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.