Header Ads



வெள்ளவத்தையில் புதிய முஸ்லிம், பாடசாலை நிர்மாணிக்கப்படும் - ரணில்


கொழும்பு, தென்பகுதியில் வாழும் முஸ்லிம் மக்களின் கல்வி நடவடிக்கைகளுக்காக வெள்ளவத்தை பிரதேசத்தில் புதிய முஸ்லிம் அரச பாடசாலை ஒன்றை நிர்மாணிக்கவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இன்று காலை மாளிகாவத்த தாருஸ்ஸலாம் பாடசாலையில் நடைபெற்ற புதிய கட்டிட திறப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

நல்லாட்சி அரசாங்கத்தின் “அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை” எனும் திட்டத்தின் கீழ் சுமார் 40 மில்லியன் ரூபாய்கள் செலவில் குறித்த வகுப்பறை கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.