Header Ads



பேரணியில் பங்கேற்ற ஒவ்வொருவருக்கும் மனதார நன்றி - இது அரசாங்கத்தை வீட்டிற்கு அனுப்பும் முதல்படி

“ஜனபலய கொலம்பட்ட” பேரணியில் கலந்துகொண்ட உங்கள் ஒவ்வொருவருக்கும் மனதார நன்றி கூறுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் விடுத்துள்ள பதிவொன்றில் அவர் இதனை கூறியுள்ளார்.

“ஜனபலய கொலம்பட்ட” பேரணியில் கலந்துகொள்ள நேரம் எடுத்துகொண்ட உங்கள் ஒவ்வொருவருக்கும் எனது நன்றிகளை தெரிவித்து கொள்கின்றேன். அரசாங்கத்திற்கு எதிராக குரல் கொடுத்திருந்தீர்கள்.

இந்த பேரணியானது, அரசாங்கத்தை வீட்டிற்கு அனுப்புவதற்கான முதல்படியாகும். தொடர்ந்தும், சிறந்த போராட்டங்களை முன்னெடுப்போம்” என அவர் மேலும் கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.