Header Ads



இந்திய அணிக்கு சாதகமாக, எல்லாம் செய்திருக்கிறார்கள்: பாகிஸ்தான் கேப்டன் பரபரப்பு குற்றச்சாட்டு

ஆசியக் கிண்ண தொடருக்கான அட்டவணை இந்தியாவுக்கு சாதகமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் அணித்தலைவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடர் துபாய் மற்றும் அபுதாபியில் நடைபெற்று வருகிறது. இலங்கை, ஹாங்காங் அணிகள் தோல்வி காரணமாக வெளியேறியுள்ளன.

இதனால் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் அணி அடுத்தச் சுற்றுக்கு தகுதி பெற உள்ளன. இன்றைய போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

இந்நிலையில், பாகிஸ்தான் அணித்தலைவர் சர்பராஸ் அகமது பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளார். செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறுகையில்,

‘இந்த தொடருக்காக முதலில் வெளியிடப்பட்ட கால அட்டவணையில், இந்தியா சில போட்டிகளில் அபுதாபியில் விளையாடும் வகையில் இருந்தது.

ஆனால், தற்போது அனைத்துப் போட்டிகளும் துபாயில் விளையாடும் வகையில் இந்தியாவுக்கு சாதமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. போட்டி என்பது அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும். இந்தியா, பாகிஸ்தான் என்ற அணிகள் எல்லாம் பார்க்கக் கூடாது.

அட்டவணையை மாற்றியது தொடர்பாக ஆசியக் கிரிக்கெட் சங்கத்தின் தலையீடு அதிகமாக இருந்திருக்கக் கூடும். இந்த விவகாரம் தொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் விசாரணை மேற்கொண்டு வருகிறது’ என தெரிவித்துள்ளார்.

அதன் பின்னர் சர்பராஸ் அகமதின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த பி.சி.சி.ஐ-யின் மூத்த உறுப்பினர் ஒருவர் கூறுகையில்,

‘அபுதாபியில் இருக்கும் ஐயாத் மைதானத்தை விட துபாயில் இருக்கும் சர்வதேச கிரிக்கெட் மைதானம் மிகப் பெரியது. ஏறக்குறைய 30 ஆயிரம் பார்வையாளர்கள் போட்டியை நேரில் கண்டு களிக்கலாம்.

அதிகப்படியான ரசிகர்கள் போட்டியை கண்டு மகிழ வேண்டும் என்பதற்காகவே இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் அணிகள் விளையாடும் போட்டிகள் துபாயில் நடத்தப்படுகிறது’ என தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. வழமை போல இந்த முறையும் இந்தியாவிடம் பாக்கிஸ்தான் படுதோல்வி

    ReplyDelete

Powered by Blogger.