Header Ads



காணாமல் போன பெண், விரிவுரையாளர் சடலமாக மீட்பு


கிழக்கு பல்கலைக்கழக திருகோணமலை வளாக பெண் விரிவுரையாளரின் சடலம், சங்கமித்த கடற்கரையிலிருந்து, இன்று (21) பிற்பகல் மீட்கப்பட்டுள்ளதென, திருகோணமலை தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வவுனியா, ஆச்சிக்குளம் கட்டுக்குளம் பகுதியைச் சேர்ந்த  நடராசா போதநாயகி என்ற  (29 வயது) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மேற்படி விரிவுரையாளரை,  நேற்று (20) முதல் காணவில்லை என பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையிலேயே, இவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

1 comment:

  1. Please remove the picture. And respect the death. Please

    ReplyDelete

Powered by Blogger.