Header Ads



எங்களை சுதந்திரக்கட்சியில் இருந்து, விரட்டி விட்டார்கள்

மக்கள் சக்தி ஆர்ப்பாட்ட பேரணி தற்போதைய அரசாங்கத்தை விரட்டுவதற்கான முதல் கட்ட நடவடிக்கை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

கொழும்பில் இன்று (02) நடைபெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 67 ஆவது ஆண்டு நிறைவு இன்றாகும் எனவும் தான் கட்சிக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி வலுவானது எமது ஆட்சிக்காலத்திலேயே எனவும் அவ்வாறு வலுவான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியையே தற்போதைய நிர்வாகிகளிடம் ஒப்படைத்தேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

தங்களை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் இருந்து விரட்டியதாகவும் அதன் பின்னரே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உருவானதாகவும் முன்னாள் ஜனாதிபதி அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.