Header Ads



அமித் வீரசிங்கவை கைதுசெய்ய, ரோகின்ய அகதிகளை காப்பாற்ற நானே உதவினேன் - நாமல் குமார

கண்டி – திகன பகு­தியில் இடம்­பெற்ற வன்­செ­யல்­க­ளுடன் தொடர்­பு­பட்ட மஹசொன் பல­கா­யவின் அமித் வீர­சிங்க உட்­பட்­ட­வர்­களைக் கைது செய்ய பிரதி பொலிஸ் மா அதிபர் நாலக்க சில்­வா­வுக்கு நானே ஒத்­து­ழைப்பு வழங்­கினேன். இதே­போன்று ரோஹிங்ய அக­தி­களை கல்­கி­சையில் தாக்­கி­ய­வர்­களைக் கைது செய்­வ­தற்கும் நானே உரிய தக­வல்­களை வழங்­கினேன். இதற்­காக பொலிஸ் திணைக்­களம் அன்­ப­ளிப்­பாக எனக்கு 5 இலட்சம் ரூபா வழங்­கி­யது. 

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்றும் முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­தா­பய ராஜபக் ஷ ஆகி­யோரின் கொலை, சதித்­திட்டம் தொடர்பில் தகவல் வெளி­யிட்ட ‘ஊழ­லுக்கு எதி­ரான படை’ அமைப்பின் பணிப்­பாளர் நாமல் குமார இவ்­வாறு தெரி­வித்­துள்ளார்.

சிங்­கள நாளி­த­ழுக்கு வழங்­கிய பேட்­டி­யொன்­றி­லேயே அவர் இந்த விப­ரங்­களை வெளி­யிட்­டுள்ளார். அவர்­மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது;

ரோஹிங்ய அக­தி­க­ளான புக­லிடக் கோரிக்­கை­யா­ளர்கள் கல்­கி­சையில் வைத்துத் தாக்­கப்­பட்­டார்கள். இந்த தாக்­குதல் சம்­ப­வத்­துடன் தொடர்­பு­பட்ட சந்­தேக நபர்­க­ளான அரம்­பே­பொல ரத்­ன­சார தேரர், சிந்­தக சஞ்­சீவ, டேன் பிரி­ய­சாந்த, ஜனித மினிபே ஆகி­யோரைக் கைது­செய்ய பொலிஸார் என்­னிடம் உதவி கோரி­னார்கள். நான் ஆரம்­பத்தில் பொலி­ஸா­ருக்கு ஒத்­து­ழைப்பு நல்­க­வில்லை என்­றாலும் தேசிய பாது­காப்பு கருதி நான் பொலி­ஸா­ருக்கு உதவி செய்தேன். நான் வழங்­கிய தக­வல்­க­ளின்­படி இவர்கள் கைது செய்­யப்­பட்­டனர்.

கண்டி– தெல்­தெ­னிய வன்­செ­யல்­க­ளி­னை­ய­டுத்தும் இவ்­வாறே என்­னிடம் உதவி கோரப்­பட்­டது. நான் மஹசொன் பல­காய அமித் வீர­சிங்­கவை நன்கு அறிவேன் என்­பது பிரதி பொலிஸ் மா அதிபர் நாலக சில்­வா­வுக்குத் தெரியும். இது தொடர்பில் அவர் என்­னிடம் உதவி கோரினார். நான் அமித் வீர­சிங்க உட்­பட்ட சிலரைக் கைது செய்­வ­தற்கு ஒத்­து­ழைப்பு வழங்­கினேன்.

பொலி­ஸா­ருக்கு நான் ஒத்­து­ழைப்பு வழங்­கி­ய­தற்­கா­கவும் தக­வல்கள் தெரி­வித்­த­தற்­கா­கவும் எனக்கு 2 ½ இலட்சம் ரூபா வீதம் 5 இலட்சம் ரூபா பொலி­ஸாரால் அன்­ப­ளிப்­பாக வழங்­கப்­பட்­டது.

நான் வெளி­யிட்ட கொலைச் சதி­மு­யற்சி தொடர்­பான தக­வல்­க­ளை­ய­டுத்து எனது உயி­ருக்கு தற்­போது அச்­சு­றுத்தல் ஏற்­பட்­டுள்­ளது. யார் மூலம் எனது உயி­ருக்கு ஆபத்து ஏற்­படப் போகி­றது என்­பதை என்னால் ஊகிக்க முடியவில்லை. பொலிஸ் பாதுகாப்புக் கோரி பொலிஸ் மா அதிபரிடம் என்னால் செல்ல முடியாது. நான் ஜனாதிபதியிடமே எனக்குப் பாதுகாப்பு வழங்குமாறு கோரிக்கை விடுக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

 ARA.Fareel


4 comments:

  1. உனக்கு என்ன தேவையில்லாத வேலை இதுவெல்லாம்.நேர்மையற்ற வேலையினால் இப்போது அமைதியற்ற வாழ்க்கை.

    ReplyDelete
  2. God almighty may save you, dont afraid

    ReplyDelete
  3. வசீம் கொலை வழக்கில் தான் சிக்கி விடக்கூடாது என்று போடும் திட்டங்களில் இதுவும் ஓன்று
    தந்தையும் தனயனும் சிறிய தந்தையரும் சேர்ந்து எம் முஸ்லீம் சமூகத்திட்க்கு இழைத்த கொடுமைகளின் வெளிப்பாடு தான் இந்த கொலைமிரட்டலாக இருக்கலாம்- அதட்க்காக கைது செய்ய உதவினேன் ஆதலால்தான் எனக்கு இது என்று மொட்டந்தளைக்கு முடிச்சி போடும்.
    நடவடிக்கை வேணாம் சகோதரா. முஸ்லீம் சமூகம் இன்னும் விழிக்கவில்லை இன்னும் விழிக்கவில்லை -அதனாலதான் உங்கள் பின்னாலும் சில முஸ்லீம் ஓநாய்கள்-நன்றி

    ReplyDelete

Powered by Blogger.