Header Ads



நாய் கூடத் தின்னமுடியாத முந்திரிப் பருப்பை, ஜனாதிபதிக்கு கொடுத்த சிறிலங்கன் எயர்லைன்ஸ்


நாய் கூடச் சாப்பிட முடியாத முந்திரிப் பருப்புகளை சிறிலங்கன் எயர்லைன்ஸ் விமானத்தில் தனக்கு பரிமாறப்பட்டதாக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன விசனம் வெளியிட்டுள்ளார்.

அம்பாந்தோட்டையில் நேற்று -10- விவசாயிகள் மத்தியில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறினார்.

”அண்மையில் காத்மண்டுவில் இருந்து புதுடெல்லி வழியாக கொழும்புக்கு சிறிலங்கன் விமான சேவையில் பயணித்தேன்.

அப்போது, விமானத்தில் தரப்பட்ட தரம் குறைந்த முந்திரிப் பருப்பை என்னால் சாப்பிட முடியவில்லை.

மனிதர்களால் சாப்பிட முடியாத-  நாய் கூடத் தின்னாத, இந்தப் பருப்புகளை கொள்வனவு செய்வதற்கு யார் அதிகாரம் கொடுத்தது?” என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

எனினும் இந்த தரம்குறைந்த முந்திரிப் பருப்பு தொடர்பாக விமானப் பணியாளர்களிடம் கேள்வி எழுப்பினாரா என்பது குறித்து அவர் எந்த தகவலையும் வெளியிடவில்லை.

2 comments:

  1. It should be asked when he got it, but he is attracting innocent people during the innocent meeting only

    ReplyDelete
  2. He as head of state himself responsible for this . He cannot blame now . What's the action taken This is the situation today everywhere ee face. Who's in ability

    ReplyDelete

Powered by Blogger.