Header Ads



ரயிலுடன் கார் மோதி, நால்வர் பலி - ஓமந்தையில் சம்பவம்


வவுனியா- ஓமந்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பன்றிகெய்தகுளம் பிரதேசத்தில் ரயிலுடன் காரொன்று மோதியதில் காரில் பயணித்த நால்வர் உயிரிழந்துள்ளதுடன், இருவர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இன்று காலை 10.30 மணியளவில் பந்திரின்கேந்திரக்குளம் பிரதேசத்திலுள்ள, பாதுகாப்பற்ற ரயில் கடவை ஊடாக பயணித்த காரே ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.