Header Ads



இந்தியாவில் மஹிந்தவுக்கு குண்டு துளைக்காத கார்களுடன், ஹோட்டல் வசதி - வெடித்தது சர்ச்சை

இந்திய சுற்றுலா பயணம் மேற்கொண்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு தொடர்பில் தொடர்ந்து தகவல் வெளியாகி உள்ளது.

மஹிந்த தலைமையிலான குழுவினருக்கு இந்தியாவில் முழுமையான ஹோட்டல் வசதி வழங்கப்பட்டுள்ளது. இதற்காக அந்நாட்டு மக்களின் வரிப்பணம் செலவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விஜயத்தின் போது மஹிந்த ராஜபக்சவுக்கு, இந்திய பிரதமருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பிற்கு சமமான பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதில் இரு குண்டு துளைக்காத வாகனங்களும் அடங்கும்.

முன்னாள் ஜனாதிபதி மற்றும் இந்திய பிரதமருக்கு இடையில் நேருக்கு நேர் கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளது. கடந்த காலங்களில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து கலந்துரையாடல் மேற்கொள்ளப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்வரும் அரசியல் செயற்பாட்டு நிலைமை தொடர்பிலேயே அதிகமாக பேசப்பட்டுள்ளது.

இந்த சுற்றுலா பயணத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு, இந்திய பிரதமரிடம் இருந்து விசேட கவனிப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை முன்னாள் ஜனாதிபதி ஒருவருக்கு இவ்வாறான பாதுகாப்பு வழங்கப்பட்டமை இந்திய அரசியல் மட்டத்தில் சலசலப்பினை ஏற்படுத்தியுள்ளதாக ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

No comments

Powered by Blogger.