Header Ads



திருகோணமலையில் பூமி அதிர்வு

திருகோணமலையில் சிறியளவிலான பூமி அதிர்வு இன்று (15) நள்ளிரவு 12.40 மணியளவில் ஏற்பட்டதாகவும் சிறியளவான ஒரு அதிர்வு எனவும் திருகோணமலை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய உதவிப் பணிப்பாளர் கே.சுகுனதாஸ் தெரிவித்தார்.

இது விடயமாக தொடர்பு கொண்டு கேட்டபோதே இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் தெரிவித்த அவர்.

இவ் அதிர்வானது கிண்ணியா,மூதூர்,திருகோணமலை ,லங்கா பட்டிணம்,வெருகல் பகுதிகளிலேயே இடம் பெற்றுள்ளது.

3.58 ரிச்டர் அளவில் அதிர்வு பதிவாகியதாகவும் தெரிவித்தார்.

திருகோணமலை கடற்படை உடனே தொடர்பு கொண்டு இது விடயமாக கேட்டபோதும் சிறியளவான பூமி அதிர்வு என்றும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் தெரிவித்ததாக உதவிப் பணிப்பாளர் மேலும் கூறினார்.

இது விடயமாக தலைமைக் காரியாலயத்துக்கு  அறிக்கை சமர்ப்பித்துள்ளதாகவும் ஏனைய தகவல்கள் அதனுடைய மேலதிக விபரங்களை விரைவாக ஊடகத்துக்கு தெரியப்படுத்துவதாகவும் மேலும் தெரிவித்தார்.

-ஹஸ்பர் ஏ ஹலீம்-

No comments

Powered by Blogger.