Header Ads



பெளத்த - பாளி துறையில், முதல் முஸ்லிம் பட்டதாரி ஆஸாத்

“அச்­சேவ கிச்சங், ஆதப்பங், கோஜஞ்ஞா மரணங் சுபே!”

“நான் எனது பட்­டப்­ப­டிப்­பின்­போது ஒருநாள் பாளி மொழியில் மேலே குறிப்­பி­டப்­பட்­டுள்ள, சூத்­திரம் ஒன்றைப் படித்­துக்­கொள்ளும் சந்­தர்ப்பம் ஏற்­பட்­டது. இச்­சூத்­தி­ரத்தின் அர்த்தம், “இன்று செய்­வன யாவையும் இன்றே செய்­தி­டுவீர்; எதிர்­காலம் நிச்­ச­ய­மற்­றதே” என்­ப­தாகும். இதே­போன்றே எங்கள் முகம்­மது நபி (ஸல்) அவர்­களும், “நாளை செய்வோம் என்று எத­னையும் வைத்­துக்­கொள்ள வேண்டாம்” என்று கூறி­யுள்­ளார்கள்” இவ்வாறு முகம்மத் ஆஸாத் ஸிராஸ் தெரி­வித்­துள்ளார். இவர் மாதம்பே இஸ்­லா­ஹியா இஸ்­லா­மிய உயர்­கல்வி நிறு­வ­னத்தின் விரி­வு­ரை­யா­ள­ராவார்.

மௌல­வி­யான இவர் தமிழ்­மொழி மூலமே தனது உயர் கல்­வி­யையும் பட்­டப்­ப­டிப்­பையும் மேற்­கொண்­டுள்ளார்.

சில காலங்­க­ளாக பௌத்த – முஸ்லிம் மக்­களில் ஒரு சில­ரி­டையே நில­வி­வரும், பகைமை, வெறுப்­பு­ணர்வு குறித்து தனது கவ­லையை வெளி­யிடும் அஸாத், பௌத்த போத­னை­யையும் கற்க வேண்டும் என்ற உந்­து­தலால் 2017 ஆம் ஆண்டு இலங்கை பௌத்த மற்றும் பாளி பல்­க­லைக்­க­ழ­கத்தில் இணைந்து பட்­டப்­ப­டிப்பைத் தொடர்ந்தார்.

அதன்­படி மேற்­படி பல்­க­லைக்­க­ழ­கத்தில் பௌத்த சமயப் போத­னையைக் கற்றுப் பட்டம் பெற்ற முத­லா­வது முஸ்­லி­மாக அவர் விளங்­கு­கிறார்.

“இலங்கை பௌத்த மற்றும் பாளி பல்­க­லைக்­க­ழ­கத்தில் கற்­ப­தற்கு உங்­களைத் தூண்­டிய காரணி என்ன?” என்று பீ.பீ.ஸி. சிங்­க­ள­மொழி ஊடக சேவை முகம்­மது ஆஸாத்­திடம் எழுப்­பிய கேள்­விக்கு அவர் பதி­ல­ளிக்­கையில்;

“இலங்கை முஸ்லிம் – சிங்­கள பௌத்த மக்கள் மத்­தியில் அண்­மைக்­கா­ல­மாக வெறுப்பு, பகை­மை­யு­ணர்­வுகள் உரு­வா­கி­யுள்­ளன. இதனை இல்­லா­தொ­ழிப்­ப­தற்­காக எங்­க­ளிடம் போதிய தெளிவு இருக்க வேண்­டி­யது மிகவும் இன்­றி­ய­மை­யா­த­தாகும். இதனை முன்­வைத்தே நான் பௌத்த பட்­டப்­ப­டிப்பைத் தெரி­வு­செய்தேன்” என்று அவர் குறிப்­பிட்டார். தொடர்ந்து அவர் கூறி­ய­தா­வது;

“சம­ய­நெ­றி­களைக் கற்­கும்­போது அறிவு விருத்­தி­ய­டை­கி­றது. அத்­துடன் இதர சம­யங்கள் குறித்து கற்­கும்­போது மேலும் சிந்­தனை தெளிவு ஏற்­ப­டவே செய்­கி­றது.

இன்று சமூ­கத்தில், ஏதும் மதத்­தையோ, சம­யத்­தையோ ஊட­கங்கள் ஊடா­க­வேதான் புரிந்­து­கொள்­கி­றார்கள். அல்­லது குறித்த மதங்­களைப் பின்­பற்றும் மக்­களைப் பார்த்தே புரிந்­து­கொள்ள முடி­கி­றது.

ஒரு மதத்தைப் பற்றிப் புரிந்­து­கொள்­வ­தற்கு அம்­மதம் குறித்து படித்­து­ணர வேண்டும். அம்­ம­தத்தின் அடிப்­படை வேத நூலைப் படிக்­க­வேண்டும். அத­னை­வி­டுத்து ஊட­கங்கள் மூல­மா­கவோ அல்­லது அம்­ம­தங்­களைப் பின்­பற்றும் மக்­களைப் பார்த்தோ ஒரு வேதம், சம­யத்தைப் பற்றி பரந்­த­ளவில் புரிந்­து­கொள்ள இய­லாது.

தமிழ்­மொழி மூலம் கல்வி பெற்ற ஒரு­வரால் சிங்­களம் மற்றும் பாளி மொழி­களில் ஏதும் துறை­யொன்றைக் கற்­றுக்­கொள்­வ­தென்­பது இலே­சான காரி­ய­மன்று. குறிப்­பாகப் பட்­டப்­ப­டிப்பைத் தொடர்­வ­தென்­பது மிகவும் கடி­ன­மான சவா­லாகும்.

நான் தமிழ்­மொழி மூலம் கல்வி பெற்ற போதிலும் நான் மலே இனத்­தவன் என்­பதால், சிங்­க­ள­மொ­ழியை சர­ள­மாகப் பேசக்­கூ­டிய ஆற்றல் எனக்­குண்டு. ஆனால், எழு­தும்­போது கடும் சொற்­களை நான் அறியேன். அத்­துடன் பாளி மொழியில் ஒரு சில விட­யங்­களைப் படிக்­கும்­போது பெரும் சவால்­களை எதிர்­நோக்­கி­ய­து­முண்டு.

ஆனாலும் எனது வகுப்­பி­லி­ருந்த சக மாணவ சகோ­தர, சகோ­த­ரிகள் எனக்கு உறு­து­ணை­யாக அமைந்­தார்கள். விசே­ட­மாகப் பிக்கு மாண­வர்கள் எனக்கு நன்கு தைரி­ய­மூட்­டி­னார்கள். பல வழி­க­ளிலும் ஒத்­து­ழைப்புத் தந்­தார்கள். பல்­க­லைக்­க­ழக விரி­வு­ரை­யா­ளர்­களும் எனது விட­யத்தில் நன்கு கரி­சனை காட்­டி­னார்கள்.

நான் பௌத்த சம­யத்தைப் படிக்­கும்­போது அதன் வழி­மு­றை­க­ளுடன் இஸ்­லா­மிய வழி­மு­றை­களும் உடன்­படும் பல முன்­மா­தி­ரி­களை என்னால் உணர்ந்­து­கொள்ள முடிந்­தது.

சமா­தானம், சக­வாழ்வு, அன்பு, கருணை போன்ற பல பண்­பு­க­ளோடு இரு சம­யங்­களும் ஒன்­றிப்­போ­வதைக் குறிப்­பி­டலாம்.


எல்­லைக்­கோட்­டுக்குள் வரை­ய­றுக்­கப்­ப­டாது, அத­னின்றும் வெளியே சென்று சிந்­திக்கும் பரந்த மனமே எமக்கு வேண்டும். முஸ்லிம் என்ற வகையில் எனக்குள் ஒரு சில வரை­ய­றை­களை வைத்­துக்­கொண்­டுதான் இதர மதங்­களை நோக்­கு­கிறேன். இதற்கும் அப்பால் சென்றே எமது பார்­வையை செலுத்­த­வேண்டும். இது மிகவும் இல­கு­வான காரி­ய­மல்ல. இதற்­காகப் பரந்த மன­மொன்று வேண்டும்.

சகல சம­யங்­க­ளுக்கும் பொது­வான பெறு­ம­தி­மிக்க கட்­டு­கோப்­பொன்று உள்­ளது. அதனை அனை­வரும் பொது­வாகப் பகிர்ந்­து­கொள்ள வாய்ப்­பி­ருக்­கவே செய்­கி­றது. பொது­வாகப் பகிர்ந்து சீர்­செய்து கொள்­ளக்­கூ­டிய அந்த கார­ணியை இனம்­காட்­டு­வதே எனது குறிக்­கோ­ளாகும்.

இலங்கை பௌத்த மற்றும் பாளி பல்­க­லைக்­க­ழ­கத்தில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் இடம்­பெற்ற பட்­ட­தாரி பரீட்­சையில் நான் சித்­தி­ய­டைந்­த­தாக கடந்த ஜூலை மாதம் வெளி­யான பெறு­பேற்று அறிக்­கையில் தெரிய வந்­தது. அதனை கண்டு மட்­டில்லா மகிழ்ச்சி அடைந்தேன். இந்த பரீட்சை வெற்­றி­யோடு நான் இதன்­மூலம் பெற்ற தெளி­வினை முஸ்லிம் சமூ­கத்­திற்குப் பெற்­றுக்­கொ­டுப்­ப­தையே எனது முதல் நோக்­க­மாகக் கொண்­டுள்ளேன் என்று ஆஸாத் குறிப்­பிட்டார்.

புத்த சமயம் போன்று, இஸ்லாம் சம­யத்தை ஏனைய மதத்­தி­னரும் படித்­துக்­கொள்­வ­தற்கு இட­ம­ளிக்­கப்­பட்­டுள்­ளதா என்று பீ.பீ.ஸி. வினா எழுப்­பி­ய­போது.

அதற்கு எந்த விதத்­திலும் தடைகள் இல்லை. ஆனாலும் எங்கள் நாட்டில் அதற்­கான வாய்ப்­புகள் குறைவு. நீங்கள் பௌத்த சம­யத்தை கற்­றுக்­கொண்­டது போன்று, எங்­க­ளாலும் இஸ்லாம் சம­யத்தை கற்­றுக்­கொள்­ளக்­கூ­டிய இடங்கள் உள்­ள­னவா? என்று எனது நண்­பர்கள் என்­னிடம் வின­வு­கி­றார்கள். அவ்வாறு இல்­லை­யென்று சொல்­வ­தற்­கில்லை. ஆனால் அது அதி­க­ரிக்­கப்­பட வேண்டும்” என்று ஆஸாத் தனது உரை­யா­டலை நிறைவு செய்தார்.

தொடர்ந்து ஆஸாத் படித்து பட்டம் பெற்ற, பல்­க­லைக்­க­ழ­கத்தின் உப­வேந்தர் பேரா­சி­ரியர் கல்­லேல்லே சும­ன­சிறி தேரரை, முகம்­மது அஸாத் பட்டம் பெற்­றமை குறித்து பீ.பீ.ஸி வின­வி­ய­போது, தேரர் கூறி­ய­தா­வது; “எமது பல்­க­லைக்­க­ழ­கத்தில் பௌத்த சமய பட்­டப்­ப­டிப்பில் பட்டம் பெற்ற முத­லா­வது முஸ்லிம் இவர்தான். நாம் அனை­வரும் சகல மதங்­க­ளையும் கற்­றுக்­கொள்ள வேண்டும். ஒவ்­வொரு மதங்கள் குறித்தும் போதிய தெளி­வில்­லா­மை­யா­லேதான் தேவை­யற்ற பிரச்சினைகள் தலை தூக்குகின்றன. இதற்கு முன்னர், கிறிஸ்தவ பாதிரிகள், தமிழர்கள், இந்த பௌத்த பாடநெறியைக் கற்றுக் கொண்டிருக்கிறார்கள். முஸ்லிம் ஒருவர் இதுவே முதற்தடவையாகக் கற்றுத்தேறியுள்ளார்.

இலங்கையைப் போன்றே உலகில் மதங்களுக்கிடையே மோதல்கள் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு மதங்கள் பற்றியும் புரிந்து கொள்ளாமையாலேதான் மோதல்கள் ஏற்படுகின்றன. எனவே அடிப்படை கல்வி தகைமையுள்ள எந்த இனத்தவர்களும் பௌத்த கல்வியைப் பெற்றுத்  தேர்வதற்கு இலங்கை பௌத்த, பாளி பல்கலைக்கழகம் எப்போதும் கதவினை திறந்தே வைத்திருக்கிறது” என்று தேரர் கூறினார்.

நன்றி: பீ.பீ.சி சிங்களம் -தமிழில் ஏ.எல்.எம்.சத்தார்
 

11 comments:

  1. Welldone my friend Asad Siraz..... Masha allah

    ReplyDelete
  2. Welcome. We are very happy. Publish a book. We are ready to read.

    ReplyDelete
  3. اهلا وسهلا بك
    الله يطول عمورك ويسهل امورك

    ReplyDelete
  4. welcome
    May Allah prolong your life and make things easier for you
    We are behind you

    ReplyDelete
  5. Pleased to see a product of Naleemiah shines..May Allah SWT richly bless him to better serve our Ummaa...

    ReplyDelete
  6. Brother Azad Siraz இன் முயற்சிக்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  7. Excellent Well done Mr Azad Siraz .We live in a country Buddhist majority . Our people lived among them peacefully and respected by them . We had prominent place among them . We are loosing it now because of our own people s selfishness
    We have to study their culture must rebuild coexistence .Mr Azad well done .

    ReplyDelete
  8. My best wishes to you and people of Tanweer academy..
    We need to know their culture;traditions and way of life so that we could appreciate them and repscts them ..
    Indeed; Sri Lanka school should introduce a comparative religious studies for all secondary schools .
    Muslim community should send many Muslim undergraduate into to this area of research and study ..
    But with one condition...they must master Islam first,.
    Any way a good example..
    I will you do your PhD too in that field ..
    But do it a comparative study .


    ReplyDelete
  9. Congratulations Sheikh.
    முஹம்மத் ஷரீப் என்பவர் 1990 ஆரம்பத்தில் புத்த மதத்தில் எம்.ஏ. பட்டம் பெற்றார்.kelaniya university Post graduate institute of Pali and Buddhist studies.

    ReplyDelete

Powered by Blogger.