Header Ads



ஞானசாரருக்கு சிறுநீர், வெளியேறுவதில் தடை

நீதி­மன்­றினை அவ­ம­தித்த குற்­றத்­துக்­கான 6 வருட கடூ­ழிய சிறைத்­தண்­டனை அனு­ப­வித்­து­வரும் பொது­ப­ல­சேனா அமைப்பின் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் நேற்றுக் காலை மீண்டும் சுக­வீ­ன­முற்று வெலிக்­கடை சிறைச்­சாலை வைத்­தி­ய­சா­லை­யி­லி­ருந்து  ஸ்ரீஜ­ய­வர்த்­த­ன­புர வைத்­தி­ய­சா­லைக்கு இட­மாற்றம் செய்­யப்­பட்டார்.

நீதி­மன்றம் ஞான­சார தேர­ருக்கு சிறைத்­தண்­டனை விதித்து தீர்ப்­ப­ளிக்­கப்­பட்­ட­போது அவர் தனது சிறு­நீ­ர­கத்தில் கல் ஒன்று  உரு­வா­கி­யுள்­ளமை கார­ண­மாக ஸ்ரீஜ­ய­வர்த்­த­ன­புர வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டி­ருந்தார். அங்கு சத்­தி­ர­சி­கிச்­சையின் பின்பு குறிப்­பிட்ட கல் அகற்­றப்­பட்­டது.

சில தினங்கள் வைத்­தி­ய­சா­லையில் சிகிச்சை பெற்று வந்த ஞான­சார தேரர் கடந்த வாரம் வெலிக்­கடை சிறைச்­சாலை வைத்­தி­ய­சா­லைக்கு  மாற்­றப்­பட்டார். அவர் ஒரு சிறைத்­தண்­டனை கைதி என்­ப­த­னா­லேயே இவ் இட­மாற்றம் செய்­யப்­பட்­டது.

இந்­நி­லையில் ஞான­சார தேரர் திடீ­ரென சுக­யீ­ன­முற்­றதால் மீண்டும் ஜய­வர்த்­த­ன­புர வைத்­தி­ய­சா­லைக்கு இட­மாற்­றப்­பட்­டுள்ளார் என பொது­ப­ல­சேனா அமைப்பின் ஊடகச் செயலாளர் எரந்த நவரத்ன  தெரிவித்தார். ஞானசார தேரருக்கு சிறுநீர் வெளியேறுவதில் தடை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

2 comments:

  1. கனத்தைக்கு அனுப்பி புதைத்துவிட்டால் தற்காலிகமாக கொஞ்சம் மக்கள் அமைதியடைவார்கள்.

    ReplyDelete
  2. he will go to Norway & Miyanmar for further medication....

    ReplyDelete

Powered by Blogger.