Header Ads



அமெரிக்காவில் இருந்து, ஓடிவந்த பஷில்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் அவசர அழைப்பையடுத்து, முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஸ நேற்று (25) நாடு திரும்பியுள்ளார்.

நீதிமன்றத்தின் விசேட அனுமதியுடன் வெளிநாட்டில் தங்கியிருந்த அவர் கடந்த இரண்டு மாதங்களாக அமெரிக்காவில் விடுமுறையை கழித்துள்ளார். இந்நிலையில், பஷில் ராஜபக்ஸ எதிர்வரும் 10ஆம் திகதியே நாடு திரும்புவதற்கான விமான டிக்கட்டை தயார் செய்து வைத்திருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும் அரசியல்துறையில் ஏறபட்டுள்ள நிலை மற்றும் ஒன்றிணைந்த எதிரணி, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஒருங்கமைப்பு நடவடிக்கைகள் பல முன்னெடுக்க வேண்டியுள்ளமையால், காலம் தாழ்த்தாது உடனடியாக இலங்கைக்கு வருமாரு மஹிந்த பஷிலிடம் வேண்டுகோள் விடுத்ததையடுத்தே பஷில் ராஜபக்ஸ நேற்று நாடு திரும்பியுள்ளார்.

No comments

Powered by Blogger.