Header Ads



பூஜித்தவை பதவி விலகுமாறு, எவரும் கோரவில்லை - பாராளுமன்றத்தில் தெரிவிப்பு

பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவை இரண்டு வராங்களில் பதவி விலகுமாறு ஜனாதிபதியோ, பிரதமரோ பணிப்புரை விடுக்கவில்லையென, சட்டம் மற்றும் ஒழுங்கு பிரதி அமைச்சர் நளின் பண்டார தெரிவித்தார்.

இன்று (20) நாடாளுமன்றில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அத்துடன், பொலிஸ்மா  அதிபருக்கு எதிரான குற்றச்சாட்டு தொடர்பில் அமைச்சு மட்டத்தில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு, சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர், அமைச்சின் செயலாளருக்கு வலியுறுத்தியுள்ளதாக, பிரதி அமைச்சர் நளின் பண்டார மேலும் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.