Header Ads



ஜித்­தா­வி­லிருந்து ரயிலில், மதீனா சென்ற சல்மான்

மத்­திய கிழக்கில் மிகப்­பெரும் மின்­சார கடு­கதி ரயில்வே திட்­ட­மான ஹரமைன் அதி­வேக ரயில் சேவை கடந்த செவ்­வாய்க்­கி­ழமை ஜித்­தா­வி­லுள்ள அல்-­சு­லை­மா­னியா ரயில் நிலை­யத்தில் மன்னர் சல்­மா­னினால் ஆரம்­பித்து வைக்­கப்­பட்­டது.

இந்த அங்­கு­ரார்ப்­பண நிகழ்வில் மன்­னரின் ஆலோ­ச­கரும் மக்கா ஆளு­ந­ரு­மான இள­வ­ரசர் காலித் அல்-­ - பைஸல் மற்றும் சிரேஷ்ட அதி­கா­ரி­களும் கலந்­து­கொண்­டனர்.

மன்னர் மதீ­னா­வுக்குப் பய­ணித்­த­துடன் நிகழ்வு நிறை­வு­பெற்­றது. ரயிலின் சார­தி­யாக சவூதி நாட்­ட­வ­ரான அப்­துல்லாஹ் அல்-­ -அஹ்­மதி கட­மை­யாற்­றினார்.

நிகழ்வில் உரை­யாற்­றிய போக்­கு­வ­ரத்து அமைச்சர் கலா­நிதி நாபில் அல்-­ - அ­மௌதி, 'சவூதி அரே­பியா, யாத்­தி­ரி­கர்­க­ளுக்கு சேவை­யாற்­று­வதில் எப்­போதும் பெரு­மை­ய­டை­கின்­றது. இரு புனிதத் தலங்­களும் முன்­னொ­ரு­போதும் இல்­லா­த­வாறு நெருக்­க­மா­கி­யுள்­ளன' எனத் தெரி­வித்தார். 

சவூதி அரே­பி­யாவில் போக்­கு­வ­ரத்­துத்­து­றையில் விரி­வான இத்­திட்­டத்­திற்கு மன்னர் சல்மான் மற்றும் பட்­டத்­திற்­கு­ரிய இள­வ­ரசர் மொஹமட் பின் சல்மான் ஆகியோர் நெறிப்­ப­டுத்­தலை வழங்­கி­ய­தா­கவும், அனைத்துத் தடை­க­ளையும் கடப்­ப­தற்கு தலை­மைத்­துவம் வழங்­கிய ஆத­ரவின் கார­ண­மாக இரு புனிதத் தலங்­க­ளான மக்­கா­வுக்கும் மதீ­னா­வுக்கும் விஜயம் செய்­வோரின் எண்­ணிக்கை அதி­க­ரிக்கும் எனவும் அவர் தெரி­வித்தார்.

அதி­க­ள­வான யாத்­தி­ரி­கர்­களை வர­வ­ழைக்கும் 2030 இலக்கை நோக்­கிய திட்­டத்தின் ஒரு பகு­தியே ஹரமைன் அதி­வேக ரயில்வே திட்­ட­மாகும். தேசிய அபி­வி­ருத்­திக்கும் பொரு­ளா­தார மறு­ம­லர்ச்­சிக்கும் பிர­தான தூணாக போக்­கு­வ­ரத்து காணப்­ப­டு­கின்­றது எனவும் அவர் தெரி­வித்தார்.

1951 ஆம் ஆண்டு சவூதி அரே­பி­யாவில் முத­லா­வது ரயில்வே திட்­டத்­தினை (கிழக்கு புகை­யி­ரதம்) மன்னர் அப்துல் அஸீஸ் மற்றும் மன்னர் சவூத் ஆகியோர் ஆரம்­பித்து வைக்கும் புகைப்­ப­ட­மொன்றை அல்-­ - அ­மௌதி மன்­ன­ரிடம் கையளித்தார்.

 M.I.Abdul Nazar

No comments

Powered by Blogger.