Header Ads



துறவறவப் பெண்களை பிக்குணிகள் என்றழைப்பதை உடன் தடுக்க வேண்டும் - மகாநாயக்கர்கள் போர்க்கொடி

பௌத்த துறவறத்தில் ஈடுபடும் பெண்களை பிக்குணிகளாக அடையாளப்படுத்தல் தடுக்கப்பட வேண்டும் என்று மகாநாயக்கர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

அவ்வாறான செயற்பாடுகள் காரணமாக இலங்கையில் பௌத்த மதம் அழிவுக்குள்ளாகி வரும் நிலையில், ஜனாதிபதி தலையிட்டு பௌத்த மதத்தைப் பாதுகாப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக மல்வத்துபீட மகாநாயக்கர் திப்பட்டுவாவே சுமங்கல தேரர் மற்றும் அஸ்கிரிய பீட மகாநாயக்கர் வரகாகொட ஞானரத்ன தேரர் ஆகியோர் கூட்டாக கையொப்பமிட்டு கடிதம் ஒன்றை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

குறித்த கடிதத்தில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளவது, பௌத்த விரோதக் கருத்துக்கள் நாட்டில் தலையெடுத்து வரும் நிலையில் சில பிக்குகளின் செயற்பாடுகளும் அதற்கு துணை செய்வதாக உள்ளது.

அவற்றை மகாநாயக்க தேரர்கள் தலையிட்டு தடுத்து நிறுத்துவதற்கான அரச அனுசரணை வழங்கப்பட வேண்டும். கௌதம புத்தர் தொடர்பாக அண்மைக்காலமாக பரப்பப்படும் கட்டுக்கதைகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.

பெண்களை பிக்குணிகள் துறவறத்தில் இணைத்துக் கொள்ள முடியாது என்று பௌத்தம் தெளிவாக விளக்கமளித்துள்ள நிலையில் துறவறம் மேற்கொள்ளும் பெண்கள் பிக்குணிகள் என்றழைக்கப்படுவது உடன் தடுக்கப்பட வேண்டும்.

அதற்குப் பதிலாக அவர்கள் பஞ்ச சீலப் பெண்கள் என்றழைக்கப்படுவதே பொருத்தமானதாக இருக்கும் என்பன போன்ற இன்னும் பல கோரிக்கைகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

1 comment:

  1. Its good time to teach them Peaceful ISLAM for them to get real peace in life and after.

    ReplyDelete

Powered by Blogger.