Header Ads



சைகை மொழி பேசிய மகிந்தவும், அநுரவும்

இன்று -04- செவ்வாய்க்கிழமை பாராளுமன்ற அமர்வுகள் இடம்பெற்ற நிலையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சபைக்கு வருகை தந்தார். அவரது ஆசனத்தில் அமர்ந்திருந்த நிலையில் ஜே.வி.பி.யின் தலைவர் அநுரகுமார திசாநாயகவை பார்த்து கையசைத்து சைகை காட்டினார். எனினும் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்த சைகையை விளங்காத வகையில் அனுரகுமார சைகையால் தெரிவித்தார்.

இதனை அடுத்து ஆசனைத்தில் இருந்து எழுந்த மஹிந்த ராஜபக்ஷ அனுரகுமார இருக்கும் இடத்தை நோக்கி வந்தபோது அனுரகுமார உடனடியாக மஹிந்த ராஜபக்ஷவை நோக்கி விரைந்தார். இதனையடுத்து இருவரும் பேசிக்கொண்டனர். 

இதன்போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ:-  அரசாங்கத்தை எதிர்த்து பொது எதிரணியாக நாம் முன்னெடுக்கும் போராட்டங்களில்  இதற்கு பின்னர் மக்கள் விடுதலை முன்னணியின் ஆதரவை வழங்க முடியுமா, நாம் ஒன்றிணைந்து செயற்படுவோமா என அனுரகுமார திசாநாயக எம்.பியிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

எனினும் இதற்கு பதில் கூறிய அனுரகுமார :- நீங்கள் இப்போது முன்னெடுக்கும் போராட்டத்தை நடத்துங்கள், இதில் எம்மால் கலந்துகொள்ள முடியாது. எனினும் அடுத்து வரும் போராட்டங்களில் பார்க்கலாம் எனக் கூறுனார்.

No comments

Powered by Blogger.