Header Ads



கல்முனை ஸாஹிராவின் அசத்தல்


மாணவர்களின் தவணைப் பரீட்சை புள்ளிகளை கடந்த தவணைப் பரீட்சைகள் ஒப்பீடு செய்யும் வசதியுடன் கூடிய புதிய Online Result Portal வெளியிடப்பட்டது.

கடந்த வருடம் e-zahira திட்டத்தின் கீழ் கல்முனை ஸாஹிராக் கல்லூரியில் இலங்கையில் முதல் பாடசாலையாக தவணைப் பரீட்சை புள்ளிகள் இணையத்தில் வெளியிடப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக மாணவர்களின் தவணைப் பரீட்சை புள்ளிகளை கடந்தகால புள்ளிகளோடு ஒப்பிடக்கூடிய வசதியுடன் புதிய Online Result Port இன்று 2018-09-08 அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.

இதனை வடிவமைத்த e-zahira திட்டத்தின் வலைத்தள பொறியியலாளரும் பழைய மாணவரும் ஆகிய ஏ .ஆர் .எம் நிஷாட் அவர்களுக்கும், e-zahira திட்ட முகாமையாளர் ஷஃபி எச். இஸ்மாயில் அவர்களுக்கும் கல்லூரியின் அதிபர் MS. மொஹமட் தனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்தார்.

பார்வையிட www.kmzahira.com/results  

No comments

Powered by Blogger.