Header Ads



தற்போதைய அரசாங்கத்தை கவிழ்க்க, இந்தியாவின் உதவி கிடைக்கும்

இலங்கையின் தற்போதைய அரசாங்கத்தை கவிழ்க்க எதிர்காலத்தில் இந்தியாவின் உதவி கிடைக்கும் என கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.

பதுளையில் இன்று ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இலங்கையின் தற்போதைய அரசாங்கம் கவிழ்ந்து விடும் என்பதால், இந்தியா எதிர்காலத்தில் அரசாங்கத்தை கவிழ்க்க முன்னாள் ஜனாதிபதி தலைமையிலான கட்சிக்கு ஆதரவளிக்கும்.

அத்துடன் தனது சகோதரர் ஒருவர் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்படுவார் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கூறவில்லை.

தனது சகோதரரைப் போல் வேறு ஒருவரை வேட்பாளராக நிறுத்த முடியும் என்று மாத்திரமே அவர் தெரிவித்துள்ளதாகவும் குமார வெல்கம குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.