Header Ads



வறியநிலை குடும்பங்களுக்கு, மலசல கூடங்கள்

-பாறுக் ஷிஹான்-

யாழ்ப்பாணத்தில் மீள் குடியேறி மிகவும் வறிய நிலையில் வாழ்ந்து வரும் முஸ்லிம் குடும்பங்களுக்கு கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிசாத் பதியுத்தீன் சிபாரிசின் பெயரில் மலசல கூடங்கள்  அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது.

இத்திட்டமானது சமூக மேம்பாட்டுக்கும், இனத்துவத்துக்குமான தலைவரும், இலங்கை கூட்டுறவு நுகர்வோர் சம்மேளனத்தின் பணிப்பாளர் முஹம்மத் சஹாப்தீன் முஹம்மது ரியாஸினால் அன்பளிப்புச் செய்யப்பட்டது.

இதன்போது பூரணப்படுத்தப்பட்ட மேற்குறித்த மலசல கூடங்களை அமைச்சரின் யாழ் மாவட்டத்திற்கான மீள்குடியேற்ற இணைப்பாளர் முஜாகீத் நிசார் யாழ் மாநகர சபை உறுப்பினர் கே.எம் நிலாம் சமூக மேம்பாட்டுக்கும், இனத்துவத்துக்குமான தலைவர் முஹம்மது ரியாஸ் ஆகியோர் பயனாளிகளிடம் வழங்கி வைத்தனர்.

No comments

Powered by Blogger.