Header Ads



பௌத்த சாசனத்தை பிக்குமாரிடம் இருந்தே, பாதுகாக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது

நாட்டில் பௌத்த சாசனத்தை பௌத்த பிக்குமாரிடம் இருந்தே பாதுகாக்க வேண்டிய நிலைமை தற்போது ஏற்பட்டுள்ளதோ என்ற கேள்வி எழுவதாக அஸ்கிரிய மாநாயக்கர் வரக்காகொட ஸ்ரீ ஞானரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற 2018ஆம் ஆண்டுக்கான பௌத்த இலக்கிய விழாவில் கலந்துக்கொண்டு பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பாதுகாக்கப்பட்டு வந்த பௌத்த சாசனத்திற்கு தற்போது பாரிய ஆபத்து ஏற்பட்டுள்ளது.

பௌத்த சாசனத்தை எமது பிக்குமாரிடம் இருந்து காப்பாற்ற வேண்டுமே என்ற கேள்வி எழுந்துள்ளது. சில பௌத்த பிக்குகள் பௌத்த தர்மத்திற்கு எதிராக செயற்பட்டுள்ளனர்.

இது சம்பந்தமாக அமைதியாக வேடிக்கை பார்க்க நேரிட்டுள்ளது. அமைதியாக இருக்கலாம் அதற்கு எதிராக பேசினால் விமர்சனங்களையும் குற்றச்சாட்டுக்களையும் எதிர்நோக்க நேரிடும் எனவும் வரக்காகொட ஸ்ரீ ஞானரத்ன தேரர் குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

  1. This is end of Buddhism. Its time for all Buddhist to Search for Mythriya Buddha.. Follow Mythriya Buddha In Islam.

    ReplyDelete

Powered by Blogger.