Header Ads



சம்மாந்துறையில் தமிழர்களை, இஸ்லாத்திற்கு மாற்றவில்லை - அடியோடு மறுக்கும் ஜெயச்சந்திரன்

-யு.எல்.எம். றியாஸ்- 

சம்மாந்துறை பிரதேச சபை எல்லைக்குட்பட்ட வளத்தாப்பிட்டி இஸ்மாயில் புற கிராமத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்   தீ வைப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றது.

குறித்த  சம்பவம் இருவருக்கு இடையே இடம்பெற்ற தனிப்பட்ட  முரண்பாட்டின் காரணமாக இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது

.இது இவ்வாறு இருக்க கட்டாய இஸ்லாம்  மத மாற்றத்திற்காக செய்யப்பட்ட ஒரு சம்பவம் என   உண்மைக்குப் புறம்பாக செய்திகளை வெளியிட்ட சில ஊடகங்களை  கண்டித்தும் அதன் உண்மைத்தன்மை என்ன என்பது தொடர்பாக நேற்று  (11.09.2018)  சம்மாந்துறை பிரதேச சபை கூட்ட  மண்டபத்தில்   விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்று இடம்பெற்றது.

உப தவிசாளர் வி.ஜெயச்சந்திரன் தலைமையில் இடம்பெற்ற இவ் ஊடகவியலாளர் சந்திப்பில் சம்பவம் தொடர்பாக விளக்கமளித்தனர்.

இதன்போது பிரதேச சபை உறுப்பினர்களும் பிரசன்னமாயிருந்தனர்.

சம்மாந்துறை பிரதேச சபையின் உப தவிசாளர்  வி.ஜெயசந்திரன் கருத்துத் தெரிவிக்கையில்-

 அண்மையில் வளத்தாப்பிட்டி இஸ்மாயில் புறத்தில் இடம்பெற்ற தீ  வைப்பினால் ஒரு வீடும்,ஒரு முச்சக்கர வண்டியும் முற்றாக எரிந்துள்ளது இதனால் பாதிக்கப்பட்ட நபர் தன்னை   இஸ்லாம் மதத்திற்கு மாறச்சொன்னதாகவும் தான் அதற்கு ஒத்துப்போகாமையினால் தனது உடமைகளை தீ வைத்துள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.இது தொடர்பாக சில ஊடகங்களிலும் முக புத்தகங்களிலும் செய்திகள் வெளியிடப்பட்டிருந்தது

   குறித்த  சம்பவம் தொடர்பாக உரிய பிரதேசத்திற்கு நேரில்   சென்று  விசாரித்தபோது இது முற்றிலும் உண்மைக்குப்புறம்பான  செய்தி என்பதை அறியமுடிந்தது

.குறித்த சம்பவமானது இரு நபர்களுக்கு இடையே இடம்பெற்ற தனிப்பட்ட சம்பவமாக உள்ளது இதன் பின்னணியை அறியாமல் பொறுப்புவாய்ந்த சில ஊடகங்கள் செய்தியாக வெளியிட்டமை கண்டிக்கத்தக்கது. ஒற்றுமையாக வாழும் சமூகங்களை பிரிக்கின்ற ஒரு செயற்பாடாகவும் இதனை நாம் பார்க்கமுடிகின்றது 

 ஒரு சமூகத்தை நல் வெளிப்படுத்துகின்ற ஊடகங்கள் இவ்வாறான செய்திகளை வெளியிட்டுருப்பதுடன் அதன் உண்மைத்தன்மையையை அறியாமல் செய்தி வெளியிட்டிருப்பது  கண்டிக்கத்தக்க ஒரு செயற்பாடாகும். இக் கிராமத்தில் எந்தவொரு கட்டாய இஸ்லாம் மத மாற்றச்செயலும் இடம்பெறவில்லை என்பதனை நான் ஆணித்தரமாக தெரிவித்துக்கொள்கிறேன்.

  தனிப்பட்ட நபர்களுக்குஇடையே இடம்பெறும் பிணக்குகளை வைத்து யாரவது இலாபமடைய நினைப்பார்களேயானால் அதை நான் கண்டிக்கின்றேன் பாதிக்கபட்ட நபரிடம் மீண்டுமொருமுறை ஒரு வினாவை தொடுத்த பொழுது  உன்னை யார் மதம் மாற கட்டாயப்படுத்தினார்கள் என்று கேட்டபொழுது  பாதிக்கப்ட்ட நபர் தனக்கு நடந்த அநீதிக்கு எந்த ஒரு உபகாரமும் கிடைக்கவில்லை அத்தோடு நான் எனது வாழ்வாதாரத்தை கொண்டுசெல்லும் முச்சக்கர வண்டி ஒன்று வைத்திருந்தேன் அது கூட இன்று எரியூட்டப்பட்டுவிட்டது அதை யாரவது பெற்றுத்தருவர்களாக இருந்தால்  என்னால் சொல்லப்பட்ட விடயத்திற்கு  மறுப்புத்தெரிவிப்பதாகவும் தெரிவித்தார்.

 ஆகவே குறித்த தீ வைப்பு சம்பவம் கட்டாய மத மாற்றத்தை வலியுறுத்தி நடைபெறவில்லை என்பதனை மிகவும் ஆணித்தரமாக வலியுறுத்தி தெரிவிக்கின்றேன்  என சம்மாந்துறை பிரதேச சபையின் உப தவிசாளரும் , வளத்தாப்பிட்டியில் வசித்து வருபவருமான        வி. ஜெயசந்திரன் ஊடகவியாளர்கள் மத்தியில் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.