Header Ads



சிறைச்சாலைக்கு திரும்பினார் ஞானசாரர்

சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் இன்று ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் இருந்து மீண்டும் சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றப்படவுள்ளார்.

ஶ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர் இன்று -09- சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றப்படவுள்ளதாக ஶ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையின் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, நீதிமன்றத்தை அவமதித்ததாக பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு கடுமையான உழைப்புடன் கூடிய 6 வருடங்களில் அனுபவிக்கும் படியாக 19 வருட சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தமை குறிப்பிடத்தக்கது.

3 comments:

  1. Can someone explain 19 years sentence to be enjoyed in 6 yrs??

    ReplyDelete
  2. யா அல்லாஹ் இவருக்கு ஹிதாயத்தை கொடுப்பாயாக

    ReplyDelete
  3. @ Sahul Cader,
    Simultaneous sentences overlap each other.

    ReplyDelete

Powered by Blogger.