Header Ads



நாலக சில்வா + நாமல் குமார உரையாடலின் முழுவிபரம் - பல அதிர்ச்சித் தகவல்கள் அம்பலம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கொலை செய்வதற்கு பயங்கரவாத விசாரணைப் பிரிவின் பணிப்பாளரும் பிரதிப் பொலிஸ் மா அதிபருமான நாலக டி சில்வா சதித் திட்டம் தீட்டியதாக வெளியான தகவல்கள் கடந்த நாட்களில் நாட்டில் பல சர்ச்சைகளைத் தோற்றுவித்திருந்தன.

இந்நிலையில், நாலக டி சில்வா சதித் திட்டம் தீட்டியதாக வெளியான தகவல்கள் குறித்த உரையாடல் ஒன்று வெளியாகியுள்ளது.

அந்த உரையாடல் பின்வருமாறு,

பிரதிப் பொலிஸ் மா அதிபர்: எனக்கு மேலதிக வேலைகள் அதிகம், 14 நாட்கள் வெளிநாடு சென்றிருந்தேன். நான் இறுகிப் போயுள்ளேன்.

நாமல் குமார: நான் பயந்து போனேன். சேர் போனையும் ஓப் செய்துவிட்டிருந்தீர்கள். அமித் வீரசிங்கவின் பிரச்சினையால் உங்களுக்கு ஏதும் பிரச்சினையோ என பயந்து போனேன்.

பிரதிப் பொலிஸ் மா அதிபர்: பிரச்சினைகள் என்றால் வந்துள்ளனர். சிலர் எனக்கு எதிராக சேறு பூசுகின்றனர். நான் அவற்றுக்கு அஞ்சவில்லை. நான் அதனை கண்டு கொள்வதுமில்லை. நான் பதினான்கு நாட்கள் வெளிநாடு சென்றிருந்தேன். உனக்கு முடியுமா அவனுக்கு எதிராக பௌத்த துறவிகளை குரல் கொடுக்கச் செய்ய?

நாமல் குமார: எஸ்.ஐ.எஸ் பொறுப்பாளருக்கு எதிராகவா?

பிரதிப் பொலிஸ் மா அதிபர் : ஆம்

நாமல் குமார: ஒரு பிரச்சினையும் இல்லை, சேர் எனக்கு சரியான தகவல்கள்தான் தேவை.

பிரதிப் பொலிஸ் மா அதிபர்: நான் தகவல்களைத் தருகின்றேன். எப்படியாவது அவனுக்கு அவப்பெயர் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். நேரடியாக அவனை பீச்சானாக்க (இழிவுபடுத்துவதற்கான வட்டாரவழக்கு) வேண்டும்.

அமீத் வீரசிங்கவை இவர் சிக்கலில் போட்டார் என்ற வகையில் பிரச்சாரம் செய்யப்பட வேண்டும். கண்டி பிரதிப் பொலிஸ் மா அதிபர் இல்லை, அரச புலனாய்வுப் பிரிவின் பொறுப்பாளரே இதற்கு பொறுப்பு என்பதனை வெளிக்காட்ட வேண்டும்.

பௌத்த அமைப்புக்களின் ஊடாக இதனை வெளிப்படுத்த வேண்டும். இவரின் ஆட்கள் அமித்தை சுற்றியிருந்னர் என வெளிக்காட்ட வேண்டும். அமித்தை வன்முறைகளில் ஈடுபடத்தூண்டியவர் எனவும் பிரச்சாரம் செய்ய வேண்டும்.

அமித் வீரசிங்கவை நிர்க்கதியாக்கி அவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டதாக வெளிக்காட்டினால், அனைவரும் கோபித்துக்கொள்வார்கள்.

நாமல் குமார: அவரின் பெயர் என்ன சேர்

பிரதிப் பொலிஸ் மா அதிபர்: நிலந்த ஜயவர்தன

நாமல் குமார: நிலந்த ஜயவர்தன, பிரதமர் நம்புகின்றாரா?

பிரதிப் பொலிஸ் மா அதிபர் : பிரதமரும், ஜனாதிபதியும் நம்புகின்றனர்.

நாமல் குமார: அந்த இருவரும் நம்புகின்றனர்.

பிரதிப் பொலிஸ் மா அதிபர்: ம்ம். இந்தப் பிரச்சாரத்தை மேற்கொண்டால், பிரதமர் டக்கென்று அவரை கைவிடுவார்.

நாமல் குமார: லத்தீப் ஐயா பற்றி அறியக் கிடைத்தது.

பிரதிப் பொலிஸ் மா அதிபர் : அவரை எஸ்.டி.எப்லிருந்து தூக்க வேண்டும்.

நாமல் குமார: அவருக்கு நாகொடிக் பிரிவு உள்ளதல்லவா?

பிரதிப் பொலிஸ் மா அதிபர்: நாகொடிக் இருப்பது எமக்கு பிரச்சினை கிடையாது. எஸ்.டி.எப்லிருந்து தூக்கினால் அதிகாரங்கள் சிதைந்து போகும். எஸ்.டி.எப்ல் பதவி வகிப்பதனால்தான் அவருக்கு அதிகாரம் காணப்படுகின்றது.

நாமல் குமார: நாகொடிக் (போதைப் பொருள் தடுப்புப் பிரிவில்) எனது நண்பர் ஒருவர் இருக்கின்றார். எஸ்.டி.எப். (விசேட அதிரடிப்படை)க்கு வழங்கப்படும் நிதி ஒதுக்கீடுகளை பொலிஸ் மா அதிபர் நிறுத்திக் கொண்டுள்ளதாக அவர் கூறினார்.

பிரதிப் பொலிஸ் மா அதிபர்: அது பொய் கதை, மக்களுக்கு எஸ்.டி.எப். பீதி ஏற்பட்டுள்ளது. நாமே மஹாசோன் அமைப்பை பிடித்தோம். எஸ்.டி.எப். அதனைச் செய்யவில்லையே. எமக்கு முடியும், பொலிஸாரினால் மக்களுக்கு சேவையாற்ற முடியும். எஸ்.டி.எப். எதற்கு பொய்யான பீதியே உருவாக்கப்பட்டுள்ளது.

நாமல் குமார: சேர் சொன்னது போன்று முகநூல் கணக்கு ஒன்றை உருவாக்கி இவற்றை போட வேண்டும். இன்று முகநூலே சிறந்த ஊடாக அமைந்துள்ளது. ஒரே மணித்தியாலத்தில் நாடே உலகமே தகவல்களை அறிந்து கொள்ள வழியமைக்கும். பஸ்ஸில் ரயிலில் செல்லும் போதும் அதனை பார்க்கின்றார்கள்.

பிரதிப் பொலிஸ் மா அதிபர்: அதற்கு ஓர் கணக்கு உருவாக்க முடியாதா?

நாமல் குமார: இல்லை சேர். எல்லோருக்கும் தெரியும்.

பிரதிப் பொலிஸ் மா அதிபர்: உயிரிழந்த நபர்களின் பெயர்களில் உருவாக்க முடியாதா

நாமல் குமார: முடியும் சேர். அப்படித்தான் பலர் உருவாக்குகின்றார்கள்.

பிரதிப் பொலிஸ் மா அதிபர்: அவதானமாக, தொழில்நுட்பமும் உண்டு சட்டமும் உண்டு. சேறு பூச போய் உள்ளே இருக்க நேரிடும். நான் அடித்தால் ஒரே அடிதான் இவனால் எழும்ப முடியாது. சாலிய ரனவக்க மற்றும் டென் பிரியசாத் இவனுடன் இணைந்துள்ளனர். அதனை புளொக் செய்ய வேண்டும்.

நான் முகநூல் கணக்கு ஒன்றை ஆரம்பிக்கின்றேன், அதற்கு இவர்கள் செய்யும் மோசமான செயற்பாடுகளை அம்பலப்படுத்த வேண்டும். இவர்கள் இருவரையும் பீச்சானாக்க வேண்டும். வரும் தேர்தலுக்கு முன்னதாக இரண்டு மூன்று பேரை தாக்க வேண்டுமென்றால் முடியும்தானே.

பிரதிப் பொலிஸ் மா அதிபர்: என்னுடன் தொடர்பு பேணுவேரை தேடுகின்றனர்.

நாமல் குமார: உண்மையில் சேருக்கு அஞ்சுகின்றனர்.

பிரதிப் பொலிஸ் மா அதிபர்: ஆம் எனக்கு அவர்கள் அஞ்சுகின்றார்கள்.

நாமல் குமார: நீங்கள் பொலிஸ் மா அதிபராவீர்கள் என்று அஞ்சுகின்றார்கள் போலும். ஏதேனும் மோசடியான முறையில் தேசியப் புலனாய்வுப் பிரிவிற்கு பொறுப்பானர் பணம் சம்பாதித்திருக்க வேண்டும்.

பிரதிப் பொலிஸ் மா அதிபர்: ஆம் அவ்வாறு பணம் சம்பாதித்துள்ளார். இவருக்கு இந்திய புலனாய்வுப் பிரிவுடன் தொடர்பு உண்டு. பல மில்லியன் ரூபா பெறுமதியான வியாபாரம் செய்கின்றார்கள். ஓய்வு பெற்றுக்கொண்ட பின்னரும் அந்த வியாபாரத்தை முன்னெடுக்க முடியும்.

நாமல் குமார: டி.ஐ.ஜீ நந்தன முனசிங்க என்பவர் பற்றி கேள்வி பட்டேன், அப்படி ஒருவர் இருக்கின்றாரா?

பிரதிப் பொலிஸ் மா அதிபர்: அவர்தான் பெரிய பிரச்சினை, பாலியல் தொழில் மையங்கள் ஊடாக பணம் சம்பாதிக்கின்றார், ஊழல் மோசடி குகையென்றே அவரை கூற வேண்டும்.

நாமல் குமார: சீனியர் டி.ஐ.ஜீ ஒருவர்தானே அவர்?

பிரதிப் பொலிஸ் மா அதிபர்: ஆம். ஹக்மீமன தயாரட்ன உள்ளிட்டோருக்கு பிணை வழங்குவதற்கு இவரே நடவடிக்கை எடுத்திருந்தார். நான் உங்களுக்கு பேசினால் தொலைபேசியில் பதிலளிக்கவும்.

நாமல் குமார: என்னுடைய போனுக்கா சேர்

பிரதிப் பொலிஸ் மா அதிபர்: இந்த மொபிடேல் போனை ஆற்றில் வீசி விடவும். தேடிக்கொள்ள முடியாதவாறு ஆற்றில் வீசவும். அடுத்த வாரம் புதிய போன் ஒன்று கிடைக்கும். எமது காரியாலயத்திற்கு ஐந்து போன் வரும் அதில் ஒன்றை தருகின்றேன். புதிய சிம் ஒன்றை போட்டுக் கொள்ளவும்.

அதில் எனக்கு மட்டும் அழைக்கு எடுக்கவும். வீட்டில் இருந்து அழைப்பு எடுக்க வேண்டாம், வீட்டிலிருந்து ஒரு கிலோ மீற்றர் வந்து என்னுடன் பேசவும். தேசிய புலனாய்வு பிரிவு உங்களை பின்தொடரக்கூடும். நானும் ஓர் தனியான இலக்கத்தை பெற்றுக் கொள்கின்றேன் அதன் ஊடாக இருவரும் தொடர்பு கொள்ள முடியும். அல்பிட்டிய பகுதியில் நிஹால் தலதூ என்ற நபர் இருக்கின்றான் அவன் பௌத்த பிக்குகளுடன் நல்ல சிநேகிதம்.

நாமல் குமார: பொலிஸ் உத்தியோகத்தரா

பிரதிப் பொலிஸ் மா அதிபர்: ஆம் அல்பிட்டி எஸ்.ஐ ஒருவர். பெசில், கோதபாய, பொதுபல சேனா உள்ளிட்ட தரப்புக்களுடன் அவனுக்கு தொடர்பு உண்டு. இந்த நபருக்கும் அமைப்புக்களுக்கும் இடையிலான தொடர்பு பற்றிய விபரங்கள் தேடித் தாருங்கள். இந்த நபர்கள் வழங்கும் பொலிஸ் மற்றும் சட்ட ஆலோசனைகள் என்ன என்பது பற்றியும் தெரிவியுங்கள். நினைவிருக்கட்டும் பெயர் நிஹால் தல்துவ.

பிரதிப் பொலிஸ் மா அதிபர்: ஜனாதிபதி மீதும் எனக்கு நம்பிக்கையில்லை. நாம் பிரதமர் மீது நம்பிக்கை வைத்தே செயற்பட வேண்டும். 2020ம் ஆண்டில் கோதபாய ராஜபக்ஸ மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோர் இணைந்து கொள்வார்கள்.

ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் முரண்பாடு காணப்படுகின்றது. ஜனாதிபதியை நம்ப முடியாது. அதனால் முடியாத சந்தர்ப்பம் வந்தால் 2020ம் ஆண்டு அண்மிக்கும் போது கோதபாய ராஜபக்ஸவிற்கோ அல்லது மைத்திரிபால சிறிசேனவிற்கோ மாகந்துரே மதுஸைக் கொண்டு ஏதேனும் செய்யுங்கள். முடிந்த எதையேனும் செய்யுங்கள். ஏனென்றால் கோதபாயவிற்கும் மதுஸிற்கும் முரண்பாடு உண்டு அதேபோன்று மைத்திரிக்கும் மதுஸிற்கும் இடையில் முரண்பாடு உண்டு.

இந்நிலையில், பிரதிப் பொலிஸ் மா அதிபர் என்ற போர்வையில் வேறும் எவரும் பேசினார்களா அல்லது அவரே பேசினாரா என்பது குறித்து விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.