Header Ads



பாராளுமன்றத்தில் கூச்சல்குழப்பம் - எதிர்ப்புகளின்றி சட்டமூலங்களை நிறைவேற்றிய அரசாங்கம்

நாடாளுமன்றத்தில், சபை நடவடிக்கைகள் கூச்சல் குழப்பத்துடன், சற்றுமுன்னர் நிறைவடைந்தன.

ஒன்றிணைந்த எதிரணியின் நாளை(05) நடத்தவிருக்கின்ற, அரசாங்கத்துக்கு எதிரான ​பேரணி தொடர்பில், இரு தரப்பினருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்துக்கு இடையில், மூன்று சட்டமூலங்களை எவ்விதமான எதிர்ப்புகளும் இன்றி அரசாங்கம் நிறைவேற்றிக்கொண்டது.

இதனையடுத்து, ஒன்றிணைந்த எதிரணியினால் முன்வைக்கப்படவிருந்த சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணைக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. பிரேரணை முன்வைப்பதற்கு யாரும் முன்வராமையால், நாடாளுமன்ற நடவடிக்கைகள் யாவும், நாளை பிற்பகல் 1 மணி வரையிலும் ஒத்திவைக்கப்பட்டது.

No comments

Powered by Blogger.