Header Ads



யாழ்ப்பாணத்தில் மீனவரின், வலையில் சிக்கிய கழுதைப் புலி (படம்)

-பாறுக் ஷிஹான்-

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  சுழிபுரம் சவுக்கடி பகுதியில் உள்ள மீனவர் ஒருவரின் வலையில் கழுதைப் புலி(சருகுப்புலி) சிக்கியுள்ளது.

இச்சம்பவம் இன்று (7) காலை இடம்பெற்றுள்ளது.

வழமைபோல் கடல்தொழிலுக்கு சென்று தனது பணியினை ஆரம்பித்துள்ளார். எனினும் வழமைக்கு மாறாக வலை கணமாக இருந்தமையினால  சக மீனவரின் உதவியுடன் கரை சேர்க்கப்பட்ட வலையில் ஒரு உயரினம் அசைவதைக் கண்டு அதிர்ச்சியடைந்த மீனவர்கள் காரைநகர் கடற்படையினரிடம் தெரிவிக்கப்பட்டது.

பின்னர் வன பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டதை அடுத்து அவர்கள் அதை மீட்டுச் சென்றுள்ளனர்.


No comments

Powered by Blogger.