Header Ads



புத்தளத்தில் ராட்சத முதலை பிடிபட்டது - பல நாய்களை விழுங்கியதாக குற்றச்சாட்டு


புத்தளத்தில் பாரியளவிலான முதலை ஒன்றை வனவிலங்கு அதிகாரிகள் சுற்றிவளைத்து பிடித்துள்ளனர்.

ஆனமடுவ பிரதேசத்தில் வைத்து இந்த முதலை நேற்றிரவு பிடிக்கப்பட்டுள்ளது.

முதலையை மீட்ட அதிகாரிகள், வில்பத்து தேசிய வனவிலங்கு பூங்காவில் விடுவித்துள்ளனர்.

சுமார் 9 அடி நீளமான முதலை ஒன்றே இவ்வாறு பிடிக்கப்பட்டுள்ளதாக வனவிலங்கு அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

ஆனமடுவ பிரதேசத்திலுள்ள பல நாய்களை இந்த முதலை விழுங்கியுள்ளதாக அந்தப் பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

No comments

Powered by Blogger.