Header Ads



ஒரேயொரு வெள்ளை, எருமையும் சுட்டுக்கொலை - சிங்கராஜா வனத்தில் சம்பவம்


சிங்கராஜா வனத்தில் காணப்பட்ட ஒரேயொரு வௌ்ளை எருமை இன்று (11)  துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக, வனஜீவராசிகள் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சிங்கராஜா வனத்துக்கு அருகிலுள்ள தேயிலைத் தோட்டமொன்றில்  இந்த எருமை விழுந்துக் கிடப்பதை அவதானித்த பிரதேசவாசிகள் வனஜீவராசிகள் அதிகாரிகளுக்கு அறிவித்​துள்ளனர்.

இதனையடுத்து குறித்த பகுதிக்கு வருகைத் தந்த அதிகாரிகள் எருமையின் சடலத்தை மீட்டுள்ளனர்.

குறித்த வௌ்ளை எருமை மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டவர்கள் குறித்து வனஜீவராசிகள் அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

No comments

Powered by Blogger.