Header Ads



அடித்தால், அடிப்போம் - மகிந்த டீமுக்கு மங்கள எச்சரிக்கை

மக்களை பலி எடுக்க கொழும்பு வரும் நாமல் தலைமையிலான குழுவினரின் நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் தயாராக இல்லை என்று அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

2015ஆம் ஆண்டிற்கு பின்னர் இலங்கை ஐந்து நட்சத்திர ஜனநாயக நாடாகியுள்ளது. எந்தவொரு நபருக்கும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தும் அளவிற்கு இலங்கை ஜனநாயக நாடாகியுள்ளமை விசேட அம்சமாகும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த எதிர்ப்பு நடவடிக்கையினை மேற்கொள்ளும் நாமல் உட்பட பிரதான தலைவர்கள் பாரிய ஊழல் குற்றச்சாட்டுகளின் கீழ் குற்றம் சுமத்தப்பட்டவர்களாகும்.

இந்த நபர்களுக்கு கடும் நிபந்தனையிலேயே பிணை வழங்கப்பட்டுள்ளது. கொழும்பிற்கு வருபவர்கள் திரும்பி செல்லவில்லை என்றால், அவர்களை எப்படி அனுப்ப வேண்டும் என எங்களுக்கு தெரியும். அடித்தால் அடிப்போம் என அமைச்சர் எச்சரித்துள்ளார்.

No comments

Powered by Blogger.