Header Ads



மகிந்தவின் பேரணிக்கு, மைத்திரி ஆசிர்வாதம் வழங்கினாரா..?

கூட்டு எதிர்க் கட்சியின் மக்கள் சக்தி நடவடிக்கைக்கு அரசாங்க தரப்பிலிருந்து எந்தவித தடைகளும் வராமல் இருந்தமைக்குக் காரணம், ஜனாதிபதியின் ஆசீர்வாதம் இந்த நடவடிக்கையின் மீது இருந்தமையே ஆகும் என அரசாங்கத்திலிருந்து வெளியேறிய 16 பேர் கொண்ட குழுவிலுள்ள பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பீ. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இன்று (06) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

நேற்றைய ஆர்ப்பாட்டத்துக்கு வந்த அத்தனை பேரும் கோரிய ஒரே விடயம், ஐக்கிய தேசியக் கட்சி இல்லாத புதிய அரசாங்கம் மட்டுமே ஆகும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார். 

No comments

Powered by Blogger.