Header Ads



புலிகளின் ஆயுதங்கள் முஸ்லிம், அரசியல்வாதிகளிடம் இருப்பதாக கூறுவது பொய் - பொன்சேக்கா


இலங்கை இறுதிப் போரின் போது 23 ஆயிரம் விடுதலைப் புலிகளை இலங்கை இராணுவம் கொன்றதாக அப்போது இராணுவத் தளபதியாக இருந்த பீல்ட் மார்ஷல் சரத் ஃபொன்சேகா தெரிவித்தள்ளார். 

மேலும், "இறுதிப் போரில், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மனைவி, மகள் ஆகியோரும் பதுங்கு குழிகளில் இருந்து போரிட்டு மாண்டதாகவே புலனாய்வுத் தகவல்கள் கிடைத்தது´´ என்று தற்போது அமைச்சர் பதவி வகிக்கும் சரத் ஃபொன்சேகா தெரிவித்தார். 

விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் போரின் பின்னர் முஸ்லிம் அரசியல்வாதிகளிடம் ஒப்படைக்கப்பட்டதாக புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப் புலி உறுப்பினர் ஒருவர் கொழும்பில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார். இதுகுறித்து ஏதாவது நீங்கள் அறிந்துள்ளீர்களா? இவற்றில் நம்பகத் தன்மை இருக்கிறதா? என்று முன்னாள் இராணுவத் தளபதியிடம் கேட்கப்பட்டது. 

´´இவற்றை நம்ப நான் தயாரில்லை. இறுதிப் போரின் போது முஸ்லிம் தரப்பினர் விடுதலைப் புலிகளுடன் தொடர்புபட்டிருந்ததற்கான எவ்வித தடயங்களும் இருக்கவில்லை. முஸ்லிம்கள் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டார்கள் என நான் நினைக்கவில்லை. 

முஸ்லிம் மக்களை பொதுவாக எடுத்துக் கொண்டால், இன்றும் அவ்வாறான மனநிலையில் அவர்கள் இல்லை. இதனை நான் ஏற்கமாட்டேன். விடுதலைப் புலிகள் மட்டுமே அந்நேரத்தில் பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட்டனர் என்றே நான் கருதுகிறேன்.´´ என்று குறிப்பிட்டார். 

இறுதிப் போரில் பொதுமக்கள் எவரும் கொல்லப்படவில்லை என்றே போரை வழிநடத்தியதில் முக்கிய பங்காற்றிய முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ச கூறி வருகிறார். எனினும், இராணுவத்திற்குத் தலைமைதாங்கிய அந்நாள் இராணுவத் தளபதி சரத் ஃபொன்சேகா ´´ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டிருக்கலாம்´´ எனக் கூறுகிறார். 

முன்னாள் இராணுவத் தளபதி சரத் சரத்ஃபொன்சேகா இன்று (நேற்று) செய்தியாளர்கள் முன்னிலையில் வெளியிட்ட தகவல்கள் அடுத்த ஜெனீவா மனித உரிமைக் கூட்டத்தொடரில் பேசுபொருளாக மாறும் என அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். 

பிபிசி

5 comments:

  1. ஏன் இவரிடம் அனுமதிபெற்றா முஸ்லிம் அரசியல்வாதிகள் வாங்குவார்களாம்

    ReplyDelete
  2. இவர் எப்போதும் நேர்மையாக நேராகவே விஷயத்தை சொல்லுவார்.எது எப்படியோ உங்களுக்கு எங்கள் மரியாதை எப்போதும் கிடைக்கும்.

    ReplyDelete
  3. பிரபாகரனுக்கு கொடுத்ததை நினைத்தால் இன்றைக்கும் புலிகளுக்கு கிலிதானப்பா!!!!

    ReplyDelete
  4. He is the supreme man who freed our motherland from tiger terrism... he know the tiger story.. no need to teach him...

    ReplyDelete
  5. He is the supreme man who freed our motherland from tiger terrism... he knows the tiger story.. no need to teach him...

    ReplyDelete

Powered by Blogger.