Header Ads



அலரி மாளிகையில், விஷம் கலக்கப்படலாம் - ஜனாதிபதிக்கு எச்சரிக்கை


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமருடைய அலரிமாளிகையில் இடம்பெறும் நிகழ்வுகளுக்கு செல்வதாக இருந்தால், வீட்டிலிருந்து உணவுகளை எடுத்துச் செல்லுமாறு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் டிலான் பெரேரா தெரிவித்தார்.

இன்று (13) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைக் கூறினார்.

எந்தவொரு காலத்திலும் சமாதான முறையில் ஆர்ப்பாட்டமொன்று நடக்கும் போது மக்களுக்கு விசம் கொடுத்து ஆபத்து விளைவித்தது கிடையாது. பாதுகாப்பு அமைச்சராக ஜனாதிபதி இருக்கும் போது பாதுகாப்பு அதிகாரிகளுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளும் விசம் கொடுத்த நடவடிக்கைக்கு ஒத்ததாகவே உள்ளது.

இதனாலேயே இதன்பிறகு ஜனாதிபதியும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என தெரிவித்துக் கொள்கின்றோம் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார். 

No comments

Powered by Blogger.