Header Ads



பேரணி தோல்வியடைந்தாலும், நாமலுக்கு வாழ்த்து தெரிவித்த அமைச்சர்

மக்கள் பலம் கொழும்புக்கு ஆர்ப்பாட்ட பேரணி தோல்வியடைந்ததாக ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார். 

இன்று (06) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

மக்கள் பலம் ஆர்ப்பாட்ட பேரணி தோல்வியடைந்திருப்பினும் இளம் அரசியல்வாதியாக நாமல் ராஜபக்ஷ முன்வந்தமைக்கு வாழ்த்து தெரிவிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

அடுத்த முறையும் மைத்திரிபால சிறிசேனவே ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்படுவார் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.