Header Ads



பாராளுமன்றதிற்கு அருகே விசேட அதிரடிப்படை குவிப்பு, ஜனபலயவுக்கு வந்த பஸ் மீது கல்வீச்சு

ஒன்றிணைந்த எதிரணியினால் நடத்தப்படவிருக்கும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம், நாடாளுமன்றத்துக்கு செல்விருப்பதாக தகவல் கிடைத்ததையடுத்து, அங்கு விசேட அதிரடிப்படையினர் (எஸ்.டி.எப்) மேலதிக பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

ஒன்றிணைந்த எதிரணியினால், கொழும்பில் இன்று பிற்பகல்  நடத்தவிருக்கின்ற ஜனபலய எதிர்ப்பில் பங்கேற்பதற்காக, கொழும்பை நோக்கி பயணித்த பஸ்ஸின் மீது கல்வீச்சு தாக்குதல் ​மேற்கொள்ளப்பட்டுள்ளது

ஹாலி​எல- போகஹமடின்ன பிரதேசத்தில் வைத்தே இந்த கல்வீச்சுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

​இலக்கத்தகடுகள் அற்ற, கெப் ரக வாகனத்தில் வந்த ஐவரே, ஜனபலயவுக்கு வந்த தனியார் பஸ்ஸின் மீது இவ்வாறு கல்வீச்சு தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

No comments

Powered by Blogger.