Header Ads



"மது பானத்தை காட்டி கூட்டத்தை சேர்ப்பதால், ஆட்சியை மாற்ற முடியாது"

மது பானத்தை அருந்த கொடுத்து கூட்டத்தை சேர்ப்பதால் நாட்டில் ஆட்சி மாற்றத்தை ஒருபோதும் ஏற்படுத்த முடியாது என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் அமைச்சருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

கொழும்புக்கு கூட்டத்தை அழைத்து வந்ததனூடாக அரசாங்கத்தை மாற்ற முடியுமா? ஜனாதிபதியை மாற்ற முடியா? பிரதமரை மாற்ற முடியுமா? ஜனாதிபதி தொடர்பில் தீர்மானிக்க நாள் ஒன்று வரும் அது இன்றை தினம் அல்ல. 

2020 ஆம் ஆண்டின் முற்பகுதியில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் அப் போதே நாட்டின் ஜனாதிபதி யார் எனவும் பிரதமர் யார் எனவும் அமைச்சர்கள் யார் எவும்  தீர்மானிக்கப்படும். 

கொள்ளைச் செயற்பாடுகளை நாட்டுக்குள் மீண்டும் உருவாக்குவதற்காகவே முன்னாள் ஜனாதிபதியும் பொது எதிரணியினரும் இன்று முயற்சிகளை மேற்கொண்டு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர் என்றார். 

No comments

Powered by Blogger.