Header Ads



வவுனியா அரசாங்க அதிபர் ஹனிபாவுக்கு, சம்மாந்துறையில் கௌரவிப்பு வைபவம்


-யு.எல்.எம். றியாஸ்-

வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் ஐ.எம். ஹனிபாவை கௌரவிக்குமுகமாக அவரது சொந்த ஊரான சம்மாந்துறையில்   கௌரவிப்பு வைபவம் ஒன்று  இடம்பெற்றது.

சம்மாந்துறை மாலை வட்ட சமூக சேவை அமைப்பின் ஏற்பாட்டில் கிழக்கிலங்கையின் முதல் முஸ்லிம் அரசாங்க  அதிபரான ஐ.எம். ஹனிபாவை கௌரவிக்கும்   இவ் வைபவம் சம்மாந்துறை  ஒலிவ் ரெஸ்ட்டுரண்டில் இடம்பெற் றது.

மாலை வடத்தின் தலைவர் ஏ.ஆர். முஹம்மட் அலி தலைமையில்  இவ் வைபவம் இடம்பெற்றது.

இவ் வைபவத்தில் சமூக ஆர்வலர்கள்,கல்விமான்கள், சங்கத்தின் உறுப்பினர்கள் ஆகியோரால் பொன்னாடை போற்றி நினைவுச் சின்னமும் வழங்கி வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் ஐ.எம். ஹனிபா கௌரவிக்கப்பட்டார்.

இவ் வைபவத்தில் கல்விமான்கள்,உலமாக்கள்,சமூக சேவை ஆர்வலர்கள் உள்ளிடட பலர் கலந்துகொண்டனர்.



No comments

Powered by Blogger.